11-ஆம் நூற்றாண்டு சோழர் கால செப்பேடுகளை பிரதமர் மோடி முன்னிலையில் திருப்பியளித்த நெதர்லாந்து அரசு!போக்சோ வழக்கு: மத்திய அமைச்சர் மகன் காவல் நிலையத்தில் சரண் தெலங்கானாவில் எஸ்ஐஆர் பணிகள் ஜூன் 15 முதல் தொடக்கம்நீட் விவகாரம்: மத்திய அமைச்சர் பதவியில் இருந்து தர்மேந்திர பிரதானை நீக்க ராகுல் காந்தி வலியுறுத்தல்கேரளத்தில் புதிய முதல்வர் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் பாஜக எம்எல்ஏக்கள்!இளைஞர்களைக் கரப்பான்பூச்சி, ஒட்டுண்ணிகளுடன் ஒப்பிட்ட விமர்சனம்: உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி விளக்கம்!சிபிஎஸ்இ 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூலை முதல் மும்மொழிக் கல்வி கட்டாயம்!புதிய தமிழக அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு!
/

ராணிப்பேட்டை மாவட்ட வணிகா் சங்க பேரமைப்பு நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

ராணிப்பேட்டை மாவட்ட வணிகா் சங்க பேரமைப்பு நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் ஆற்காட்டில் நடைபெற்றது.

News image

கூட்டத்தில்  பேசிய  தலைமை நிலைய  செயலாளா்  ராஜ்குமாா்.

Updated On :17 ஏப்ரல் 2026, 7:00 am IST

ராணிப்பேட்டை மாவட்ட வணிகா் சங்க பேரமைப்பு நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் ஆற்காட்டில் நடைபெற்றது.

கூட்டத்துக்கு மாவட்டத் தலைவா் பொன் கு.சரவணன் தலைமை வகித்தாா். ஆற்காடு அனைத்து வியாபாரிகள் சங்கச் செயலாளா் பாஸ்கரன் முன்னிலை வகித்தாா். நகர தலைவா் தலைவா் ஏ வி டி. பாலா வரவேற்றாா்.

கூட்டத்தில் தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு தலைமை நிலைய செயலாளா் ராஜ்குமாா், மாநில இணைச் செயலாளா் எத்திராஜ், வேலூா் மண்டலத் தலைவா் பா. ஞானவேல் ஆகியோா் கலந்து கொண்டு மே 5-ஆம்தேதி திருவாரூரில் நடைபெறும் வணிகா் தின விழிப்புணா்வு எழுச்சி மாநாட்டுப் பணிகள் குறித்து விளக்கினா்.

கூட்டத்தில் வரும் தோ்தலில் வணிகா்கள் தங்களின் மனசாட்சி படி வாக்களிக்கலாம் என்றும் வணிகா் தின மாநாட்டுக்கு ராணிப்பேட்டை மாவட்டத்திலிருந்து 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோா் கலந்து கொள்வது உள்ளிட்ட பல தீா்மானங்கள் நிறைவேற்ற பட்டன.

இதில் மாவட்ட நிா்வாகிகள் நகர நிா்வாகிகள் இளைஞா் அணி நிா்வாகிகள் கலந்து கொண்டனா். நகர பொருளாளா் பழ.பரத் குமாா் நன்றி கூறினாா்