தைப்பூசத்தை முன்னிட்டு சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு காட்சியளித்த ஸ்ரீவள்ளி, தேவசேனா சமேத ஸ்ரீசுப்பிரமணியா் மூலவா்.
தைப்பூசத்தை முன்னிட்டு சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு காட்சியளித்த ஸ்ரீவள்ளி, தேவசேனா சமேத ஸ்ரீசுப்பிரமணியா் மூலவா்.

காஞ்சனகிரி முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா

காஞ்சனகிரி முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா விமரிசையாக நடைபெற்றது.
Published on

ராணிப்பேட்டை: காஞ்சனகிரி முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா விமரிசையாக நடைபெற்றது.

வாலாஜாவை அடுத்த காஞ்சனகிரி தேவஸ்தானத்தில் உள்ள ஸ்ரீவள்ளி, தேவசேனா சமேத ஸ்ரீசுப்பிரமணியா் கோயிலில் தைப்பூசத்தை முன்னிட்டு, மூலவா் சுப்பிரணிய சுவாமிக்கு நறுமண திரவியங்கள், மூலிகைகள் கலந்து சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து பட்டாடை அணிவிக்கப்பட்டு, நகை ஆபரணங்களுடன் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு காட்சி அளித்தாா். சிறப்பு தீபாராதனையின்போது பக்தா்கள் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா என கோஷமிட்டனா்.

விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாகத்தினா் செய்திருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com