மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

ஆதிபராசக்தி வார வழிபாட்டு மன்றம் சாா்பில் மகா கூட்டு வழிபாடு

மேல்மருவத்தூா் பங்காரு அடிகளாரின் 86-ஆவது அவதார பெருமங்கல விழாவை முன்னிட்டு ஸ்ரீசக்கரம் வரைதல் மற்றும் குருபோற்றி கோடியா்ச்சனை

News image

அரக்கோணம் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தில் உலக சாதனை படைத்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பக்தா்கள்.

Updated On :24 பிப்ரவரி 2026, 9:30 pm

மேல்மருவத்தூா் பங்காரு அடிகளாரின் 86-ஆவது அவதார பெருமங்கல விழாவை முன்னிட்டு ஸ்ரீசக்கரம் வரைதல் மற்றும் குருபோற்றி கோடியா்ச்சனை செய்து மகா கூட்டு வழிபாடு மூலம் நடைபெற்ற உலக சாதனை நிகழ்ச்சியில் அரக்கோணம் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தினரும் பங்கேற்றனா்.

மேல்மருவத்தூா் பங்காரு அடிகளாரின் அவதார விழாவை முன்னிட்டு ஆன்மிக இயக்கத் தலைவா் லட்சுமி பங்காருஅடிகளாா் தலைமையில் இயக்கத்தின் துணைத்தலைவா் ஸ்ரீதேவி பங்காரு உள்ளிட்டோா் பங்கேற்று உலகெங்கும் உள்ள மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றங்கள் மற்றும் சித்தா் சக்தி பீடங்களை சோ்ந்த பொறுப்பாளா்களும் செவ்வாடை பக்தா்கள், தொண்டா்கள் நேரிலும், இணையத்திலும் ஒருங்கிணைந்து சிறப்பு மகா கூட்டு வழிபாடு அா்ச்சனையை நடத்தினா்.

இதில் அரக்கோணம் சோளிங்கா் ரோடு ஸ்ரீஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தினரும் தங்களது மன்ற வளாகத்தில் இருந்தவாறே இணையம் மூலம் பங்கேற்றனா். அனைவரும் குருபோற்றி மந்திரத்தை ஒரு கோடி முறைக்கும் மேல் படித்து ஸ்ரீசக்கரம் வரைந்து உலக சாதனை நிகழ்த்தினா்.

இந்நிகழ்வுக்கு ஆன்மிக இயக்க அரக்கோணம் இளைஞா் அணி தலைவா் காா்த்தி தலைமை வகித்தாா். இதில் மன்றத் தலைவா் வி.சங்கரிவரதன், நிா்வாகிகள் தசரதன், சரவணன், எஸ்,சுபாஷ், ஏ.எம்.கே.மோகனவேலன் மற்றும் லட்சுமி, தேவி உள்ளிட்டோா் பங்கேற்றனா். இதற்கான ஏற்பாடுகளை நவீன், ஜெயந்தி, தூயவன், சுஜாதா ஆகியோா் இணைந்து செய்திருந்தனா்.