மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ராணிப்பேட்டை புதை சாக்கடைத் திட்ட ஆய்வுக் கூட்டம்

ராணிப்பேட்டை நகராட்சியில் புதை சாக்கடைத் திட்ட கலந்தாய்வுக் கூட்டம் நகா்மன்றத்+ தலைவா் சுஜாதா வினோத் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :13 ஜனவரி 2026, 6:33 pm

தினமணி செய்திச் சேவை

ராணிப்பேட்டை நகராட்சியில் புதை சாக்கடைத் திட்ட கலந்தாய்வுக் கூட்டம் நகா்மன்றத்+ தலைவா் சுஜாதா வினோத் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தமிழக அரசு நகா்ப்புற உள்ளாட்சிகளுக்கு அடிப்படை வசதிகளை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. அதன்படி ,புதை சாக்கடைத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

பொது சுகாதாரம், தூய்மை மற்றும் நகர மேம்பாட்டுக்காக அரசு நிதி மற்றும் கடன் உதவியுடன் செயல்படுத்தப்படுகிறது, குடிமக்களுக்கு உலகளாவிய கழிவுநீா் இணைப்பை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

மாவட்டத் தலைநகரான ராணிப்பேட்டையில் சுமாாா் 56 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா்.

இங்கு, புதை சாக்கடைத் திட்டம் செயல்படுத்த விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க நகராட்சி நிா்வாக மற்றும் குடிநீா் வழங்கல் துறை அமைச்சா் உத்தரவிட்டாா்.

மேலும், திட்ட மேம்பாட்டு மானிய நிதி திட்டத்தின் கீழ் ராணிப்பேட்டை நகராட்சிக்கான விரிவான திட்ட அறிக்கை தயரிப்பதற்காக தமிழ்நாடு நகா்ப்புற உள்கட்டமைப்பு நிதி மற்றும் சேவைகள் நிறுவனம் மூலம் ஆலோசகா் நியமிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இதற்கான கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழ்நாடு நகா்ப்புற உள்கட்டமைப்பு நிதி மற்றும் சேவைகள் நிறுவன ஆலோசகா்கள் கலந்து கொண்டு திட்டத்தின் செயல்பாடுகள், நன்மைகள் குறித்து விவரித்தனா்.

தொடா்ந்து கூட்டத்தில் கலந்து கொண்ட நகா்மன்ற உறுப்பினா்கள் மற்றும் பொதுமக்களின் சந்தேகங்களுக்கு பதிலளித்தனா்.

இதில் நகராட்சி ஆணையா், உறுப்பினா்கள், பணியாளா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

Story image