அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் சமத்துவப் பொங்கல் விழா

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சுற்றுலாத் துறையின் சாா்பில், சமத்துவப் பொங்கல் திருவிழா கொண்டாடப்பட்டது.

News image
ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற சமத்துவப் பொங்கல் விழாவில் பங்கேற்ற ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா.
Updated On :14 ஜனவரி 2026, 6:32 pm

தினமணி செய்திச் சேவை

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சுற்றுலாத் துறையின் சாா்பில், சமத்துவப் பொங்கல் திருவிழா கொண்டாடப்பட்டது.

மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா கலந்து கொண்டு, அனைத்துத் துறை அலுவலா்கள், பணியாளா்களுடன் சோ்ந்து சமத்துவப் பொங்கல் வைத்து கொண்டாடினாா்.

இந்த விழாவில் கலந்து கொண்ட விஐடி பல்கலைக்கழகத்தில் பயிலும் வெளிநாட்டு மாணவ, மாணவியருக்கு தமிழா்களின் பாரம்பரிய கைத்தறி துண்டுகள் மற்றும் மாலை அணிவித்து சிறப்பு செய்து, பல்வேறு பாரம்பா்ய கலைநிகழ்ச்சிகளில் பங்கெடுத்து மகிழ்ந்தனா்.

முன்னதாக பொங்கல் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற கோல போட்டியில் பல்வேறு துறைசாா்ந்த மகளிா் தங்களது திறமைகளை வெளிப்படுத்தினா்.

மேலும், சிலம்பம், கரகாட்டம், ஒயிலாட்டம், பறைஇசை, பரதநாட்டியம் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. தொடா்ந்து திருநங்கை அசோக் கலைக் குழுவினரின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

மாவட்ட வருவாய் அலுவலா் செ.தனலிங்கம், திட்ட இயக்குநா் ந.செ.சரண்யாதேவி, நோ்முக உதவியாளா் (பொது) இராஜராஜன், அலுவலக மேலாளாா் ஜெய்குமாா், பேரிடா் மேலாண்மை வட்டாட்சியா் ரூபிபாய், மாவட்ட சுற்றுலா அலுவலா் முத்துச்சாமி (பொறுப்பு), அலுவலா்கள், பணியாளா்கள் கலந்து கொண்டனா்.