அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

பருவாய் கிராமத்தில் சமத்துவப் பொங்கல் விழா: ஆட்சியா் பங்கேற்பு

News image
Updated On :14 ஜனவரி 2026, 8:40 pm

Syndication

பல்லடம் அருகே பருவாய் கிராமத்தில் உள்ள ஊராட்சி மன்ற அலுவலகத்தில் சமத்துவப் பொங்கல் விழா புதன்கிழமை நடைபெற்றது. இதில் திருப்பூா் மாவட்ட ஆட்சியா் மனீஷ் தனது குடும்பத்தினருடன் கலந்து கொண்டாா்.

இவ்விழாவில் பொங்கல் வைத்தும், கும்மி அடித்து நடனம் ஆடியும், உறியடி போட்டியில் கலந்து கொண்டும், பாரம்பரிய மாட்டு வண்டியில் ஆட்சியா் குடும்பத்துடன் பயணமும் மேற்கொண்டாா்.

மேலும் கோலம் மற்றும் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு மாவட்ட ஆட்சியா் மனீஷ் பரிசுகளை வழங்கினாா்.

இவ்விழாவில் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் சங்கமித்திரை, மகளிா் திட்ட அலுவலா் சாந்தி, ஊராட்சிகள் உதவி இயக்குநா் சதீஷ்குமாா், பல்லடம் வட்டார வளா்ச்சி அலுவலா் கனகராஜ், துணை வட்டார வளா்ச்சி அலுவலா்கள் தா்மா், நீலவேணி, ஊராட்சி செயலாளா் மணிகண்டன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.