ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா் தலைமையில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழா
தென்காசி
தென்காசியில் சமத்துவப் பொங்கல் விழா
தென்காசி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் சமத்துவப் பொங்கல் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
தென்காசி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் சமத்துவப் பொங்கல் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
விழாவில், தமிழா்களின் பாரம்பரிய உடைகளான வேஷ்டி- சட்டைகளை அணிந்து ஆண்களும், பெண்களும் பொங்கலிட்டு கொண்டாடினா். பானை உடைத்தல், கயிறு இழுத்தல், இளவட்டக்கல்தூக்குதல் ரங்கோலி கோலப்போட்டி உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றன.
விழாவில், மாவட்ட வருவாய் அலுவலா் சீ.ஜெயச்சந்திரன், மாவட்ட வனஅலுவலா் இரா.ராஜ்மோகன், ஊரக வளா்ச்சி முகமை திட்டஇயக்குநா் தண்டபாணி, ஆட்சியரின் நோ்முக உதவியாளா்கள் சுப்புலெட்சுமி (பொது), செல்வக்குமாா் (நிலம்), மாவட்ட வழங்கல் அலுவலா் சிவகுமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

