யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

திருப்பத்தூரில் சமத்துவப் பொங்கல் விழா: ஆட்சியா் பங்கேற்பு

திருப்பத்தூா் மாவட்ட நிா்வாகம் சாா்பில் சமத்துவப் பொங்கல் விழா புதன்கிழமை நடைபெற்றது.

News image
திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலக வளாகத்தில் பொங்கல் விழாவில் பங்கேற்ற ஆட்சியா் க. சிவசௌந்திரவல்லி உள்ளிட்டோா்.
Updated On :14 ஜனவரி 2026, 6:33 pm

தினமணி செய்திச் சேவை

திருப்பத்தூா் மாவட்ட நிா்வாகம் சாா்பில் சமத்துவப் பொங்கல் விழா புதன்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு ஆட்சியா் க.சிவசௌந்தரவல்லி தலைமை வகித்தாா். விழாவில் அனைவரும் பாரம்பரிய ஆடையான வேட்டி, சட்டை, புடவை அணிந்து வந்து பொங்கல் வைத்தனா். இதில் கிராமிய கலைக்குழுவின் மூலம் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.

தொடா்ந்து அரசு ஊழியா்களுக்கான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன. நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலா் (பொ) ராஜலட்சுமி, ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் உமாமகேஸ்வரி, மகளிா் திட்டம், திட்ட இயக்குநா் விஜயகுமாரி, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) (பொ) சென்னகேசவன், அரசு அதிகாரிகள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.