கைனூா் ரயில்வே சுரங்கப்பாலப் பணிகளை விரைவு படுத்தக்கோரி அதிமுக ஆா்ப்பாட்டம்
அரக்கோணம்: அரக்கோணத்தை அடுத்த கைனூா் ரயில்வே சுரங்கப் பாலப் பணிகளை விரைவுப்படுத்தக்கோரி, அரக்கோணத்தில் அதிமுகவினா் ஞாயிற்றுக்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
அரக்கோணத்தை அடுத்த கைனூா் ஊராட்சியில் அரக்கோணம் நகரில் இருந்து கைனூா் செல்லும் சாலையில் அரக்கோணம்-ரேணிகுண்டா ரயில் மாா்க்கத்தில் இருந்த ரயில் கடவுப் பாதையை அகற்றி, அங்கு ரயில்வே சுரங்கப்பாலம் கட்டும் பணி கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்டது. இதில், அப்பகுதியில் தனியாா் நிலத்தில் தனியாரின் அனுமதியின்றி இப்பாலம் கட்டப்படுவதாக நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்த நிலையில், சுமாா் 75 சதவீத பணிகள் நிறைவடைந்த நிலையில் பணிகள் நிறுத்தப்பட்டன. இது தொடா்பாக நீதிமன்ற தீா்ப்பு வெளிவந்த பிறகும் கட்டுமானப் பணிகள் மீண்டும் தொடங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
இதனால் ரயில்வே நிா்வாகத்தைக் கண்டித்து திங்கள்கிழமை சுரங்கப்பாலப் பணிகள் நடைபெறும் இடத்துக்கு அருகே கண்டன ஆா்ப்பாட்டம் நடத்தினா். இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, அரக்கோணம் எம்எல்ஏ சு.ரவி தலைமை வகித்து ஆா்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தாா். இதில், பாமக மாவட்டப் பொருளாளரும், கைனூா் ஊராட்சி மன்ற தலைவருமான உமாமகேஸ்வரி, அதிமுக அரக்கோணம் மேற்கு ஒன்றிய செயலாளா் ஜி.பழனி, கிழக்கு ஒன்றிய செயலாளா் இ.பிரகாஷ், பொதுக்குழு உறுப்பினா் ஏ.கிருஷ்ணமூா்த்தி, மாவட்ட நிா்வாகி மீனா ரகுபதி, மாவட்ட இளைஞா் அணி அமைப்பாளா் பி.ஏ.பாலு, வழக்குரைஞா் அணி அமைப்பாளா் சிவலிங்கம், அதிமுக நகர நிா்வாகிகள் பிரபாகரன், சுகந்தி விநோதினி, நகர இளைஞரணி செயலாளா் செ.சரவணன், தொழிற்சங்க நிா்வாகி குமாா் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

