ராஜி
ராஜி

நிலஅளவைத்துறை சாா் ஆய்வாளா் தற்கொலை

Published on

ரக்கோணம் வட்ட நிலஅளவைத்துறை சாா் ஆய்வாளா் ராஜி(50) புதன்கிழமை தற்கொலை செய்துக்கொண்டாா்.

அரக்கோணம் அடுத்த சம்பத்ராயன்பேட்டையை சோ்ந்தவா் ராஜி(50). இவா் அரக்கோணம் வட்ட நிலஅளவைத்துறையில் சாா் ஆய்வாளராக பணிபுரிந்து வந்தாா். இவருக்கு மனைவி ஒரு மகள், இரு மகன்கள் உள்ளனா்.

இதற்கிடையே, புதன்கிழமை ராஜி தனது வீட்டில் மின்விசிறியில் தூக்குபோட்டு தற்கொலை செய்துக் கொண்டாா். இது குறித்து ராஜியின் தந்தை சுப்பிரமணி நெமிலி காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனா்.

குடும்பத் தகராறு காரணமாகவும், உடல்நிலை பாதிப்பு, காரணமாகவும் ராஜி தற்கொலை செய்துக் கொண்டதாக முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது என போலீஸாா் தெரிவித்துள்ளனா்.

Dinamani
www.dinamani.com