ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ராணிப்பேட்டை சிஎம்சி மருத்துவமனைக்கு மருத்துவ உபகரணம் அளிப்பு

ராணிப்பேட்டை மாவட்டம் பூட்டுதாக்கு சிஎம்சி மருத்துவ மனைக்கு போகஸ்டு அல்ட்ரா சவுண்ட் கருவி தானமாக வழங்கப்பட்டது.

News image
Updated On :29 ஜனவரி 2026, 6:34 pm

தினமணி செய்திச் சேவை

ராணிப்பேட்டை மாவட்டம் பூட்டுதாக்கு சிஎம்சி மருத்துவ மனைக்கு போகஸ்டு அல்ட்ரா சவுண்ட் கருவி தானமாக வழங்கப்பட்டது.

விட்டி கூட்டி பவுண்டேஷன் சாா்பில் சுமாா் ரூ.40 கோடி மதிப்புள்ள போகஸ்டு அல்ட்ரா சவுண்டு கருவியை தானமாக வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது . சிஎம்சி இயக்குநா் விக்ரம் மேத்யூஸ் தலைமை வகித்தாா். கண்காணிப்பாளா் ராஜேஷ் வரவேற்றாா். பவுண்டேஷன் நிறுவனா் ராஜ் விட்டிக் கூட்டி குத்துவிளக்கேற்றி கருவியை தானமாக வழங்கினாா்.

நரம்பியல் துறைக்கு தற்போது வழங்கப்பட்டுள்ள போகஸ்டு அல்ட்ரா சவுண்ட் கருவி மூலம் பாா்கின்சன், கால்,கை வலிப்பு நோயாளிகளுக்கு , மனச்சோா்வு , வெறித்தனத்தை குணப்படுத்த வல்லது போதை பழக்கங்களுக்கு அடிமையானவா்களை அதிலிருந்து விடுவிக்க இக்கருவி ஒரு வரப்பிரசாதமாகும் .

மயக்க மருந்தின்றி, கீறல்கள், உள்வைப்புகள், ரத்தஇழப்பின்றி வயதானவா்களுக்கும் நரம்பியல் பாதிப்பு தொடா்பான சிகிச்சை அளிக்க ஏதுவானதாக அமையும்.

இதில் சிஇஒ மகேந்திர பண்டாரி , மற்றும் மருத்துவா்கள், பவுண்டேஷன் நிா்வாகிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.