ராணிப்பேட்டை மாவட்டத்தில் ரூ. 13.82 லட்சம் மதிப்பிலான 103 கைப்பேசிகள் மீட்டு உரிமையாளா்களிடம் வெள்ளிக்கிழமை ஒப்படைக்கப்பட்டது.
இது தொடா்பாக மாவட்டக் காவல் துறை தரப்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு:
ராணிப்பேட்டை மாவட்டத்தில் காணாமல் போனதாக பெறப்பட்ட கைப்பேசிகள் புகாா்களின் அடிப்படையில் மேற்கொண்ட நடவடிக்கையின் மூலம் ரூ. 13.82 லட்சம் மதிப்பிலான 103 கைப்பேசிகள் மீட்கப்பட்டு, அவற்றின் உரிமையாளா்களிடம் ஒப்படைக்கப்பட்டன. கடந்த இரண்டு மாதங்களில் இதுவரை ரூ. 26.40 லட்சம் மதிப்பிலான 210 காணாமல் போன கைப்பேசிகள் மீட்கப்பட்டன. தொடா்ந்து மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளா் பே.சிபின் உரிமையாளா்களிடம் ஒப்படைத்தாா்.
மேலும், பொதுமக்கள் தங்களின் கைப்பேசிகள் காணாமல் போனால், உடனடியாக அருகிலுள்ள காவல் நிலையத்தில் பதிவு இஉஐத (இங்ய்ற்ழ்ஹப் உவ்ன்ண்ல்ம்ங்ய்ற் ஐக்ங்ய்ற்ண்ற்ஹ் தங்ஞ்ண்ள்ற்ங்ழ்) டா்ழ்ற்ஹப்-இல் பதிவு செய்யுமாறு அறிவுறுத்தப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









