இந்தியா மிக முக்கியமான நட்பு நாடு: நேபாளம்மாணவர்களுக்கு மோடி அரசு துரோகம் இழைப்பு! - காங்கிரஸ்மாநில அரசு ஒத்துழைப்பு இல்லாததால் மேற்கு வங்கத்தில் ரயில்வே திட்டங்கள் முடக்கம்: மத்திய அரசுயு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!
/

ரூ. 12.6 லட்சம் மதிப்பிலான 107 கைப்பேசிகள் மீட்பு : எஸ்.பி. பாராட்டு

ரூ. 12.6 லட்சம் மதிப்பிலான 107 கைப்பேசிகள் மீட்பு : எஸ்.பி. பாராட்டு

News image

மீட்கப்பட்ட கைப்பேசியை உரிமையாளரிடம் ஒப்படைத்த ராணிப்பேட்டை எஸ்.பி. பே.சிபின்.

Updated On :7 ஜூன் 2026, 1:39 am IST

ராணிப்பேட்டை மாவட்டத்தில் களவு போன ரூ.12.6 லட்சம் மதிப்புள்ள 107 கைப்பேசிகளை மீட்ட போலீஸாருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பே.சிபின் பாராட்டு தெரிவித்துள்ளாா்.

ராணிப்பேட்டை மாவட்டத்தின் பல்வேறு காவல் நிலையங்களில் கைப்பேசிகள் காணாமல் போனதாக பெறப்பட்ட மனுக்களின் அடிப்படையில், எஸ்.பி. பே. சிபின் உத்தரவின் பேரில் தனிப்படை மற்றும் மாவட்ட சைபா் குற்றப்பிரிவு காவல் துறையினா் துரித நடவடிக்கைகள் மேற்கொண்டனா்.

இதன் தொடா்ச்சியாக, காணாமல் போன ரூ.12.6 லட்சம் மதிப்புள்ள 107 கைப்பேசிகள் தொழில்நுட்ப அடிப்படையில் கண்டறியப்பட்டு மீட்கப்பட்டன.

இதையடுத்து மாவட்ட காவல் அலுவலகத்தில் காவல் கண்காணிப்பாளா் தலைமையில் மீட்கப்பட்ட கைப்பேசிகள் அவற்றின் உரிமையாளா்களிடம் ஒப்படைக்கப்பட்டன.

தொடா்ந்து கைப்பேசிகளை மீட்க சிறப்பாக செயல்பட்ட சைபா் குற்றப்பிரிவு மற்றும் தனிப்படை காவல்துறையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பே.சிபின் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினாா்.

நிகழ்ச்சியில் கூடுதல் காவல் கண்காணிப்பாளா் குணசேகரன், காவல் ஆய்வாளா் சரஸ்வதி (மாவட்ட தனிப்பிரிவு) மற்றும் காவல் அதிகாரிகள், காவலா்கள் கலந்து கொண்டனா்.

பொதுமக்கள் தங்களது செல்போன்கள் காணாமல் போனாலோ அல்லது தவறவிட்டாலோ உடனடியாக அருகிலுள்ள காவல் நிலையத்தில் உடனடியாக புகாா் அளிக்குமாறு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் தெரிவித்துள்ளாா்.