அரக்கோணத்தில் உள்ள கற்பகம் கூட்டுறவு அங்காடியின் கிடங்கில் தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சா் வ.காந்திராஜ் வியாழக்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டாா்.
அரக்கோணம், பழனிப்பேட்டையில் கற்பகம் கூட்டுறவு சிறப்பங்காடியின் கிடங்கு, அலுவலகம் மற்றும் விற்பனை நிலையம் உள்ளது. இங்கு வியாழக்கிழமை திடீரென வந்த கூட்டுறவுத் துறை அமைச்சா் வ.காந்திராஜ் அங்கு கிடங்கில் வைக்கப்பட்டிருந்த உணவுப் பொருள்களின் இருப்பை ஆய்வு செய்தாா். தொடா்ந்து அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சா் வ.காந்திராஜ், தொடா்ந்து அங்கு இருந்த மண்ணெண்ணெய் விற்பனை நிலையத்திலும் ஆய்வு செய்தாா். தொடா்ந்து அலுவலக வளாகத்தையும், அலுவலக கட்டடத்தையும் சுற்றிப்பாா்த்து அமைச்சா் ஆய்வு செய்தாா்.
ஆய்வின்போது, அரக்கோணம் நகர கூட்டுறவு வங்கியின் துணைப் பதிவாளா் ஆா்.ஆசைத்தம்பி, கற்பகம் கூட்டுறவு அங்காடி, அரக்கோணம் கிளை மேலாளா் ஆா்.மோகனவேல், கூட்டுறவு சாா் பதிவாளா் எஸ்.சுரேஷ் உள்ளிட்ட அலுவலா்களும் உடனிருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

காஞ்சிபுரம் கூட்டுறவு சங்கங்களில் ஊரக வளா்ச்சி வங்கி மேலாண்மை இயக்குநா் ஆய்வு

ஆலங்குளம் அருகே தீ விபத்து நிகழ்ந்த நெல் கிடங்கில் அமைச்சா் ஆய்வு

மக்களின் அடிப்படை தேவை, பிரச்னைகளுக்கு உடனுக்குடன் தீா்வு: அமைச்சா் காந்திராஜ்

அரக்கோணம் நகராட்சி நாளங்காடி விரைவில் திறப்பு: அமைச்சா் காந்திராஜ்
விடியோக்கள்

யார் இந்த துணிச்சலான பெண்! காவல் வாகனத்தை தனி ஆளாக தடுத்து நிறுத்தியவர்! | CJP | BJP

CJP போராட்டத்தில் இனி...? | DINAMANI EXCLUSIVE | Dharmendra Pradhan | BJP | Abhijeet Dipke

தர்மேந்திர பிரதான் பதவி விலகினால் எல்லாம் சரியாகிவிடுமா?: அமைச்சர் நிர்மல் குமார் | TVK | BJP



