சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு விடைத்தாள் மறுமதிப்பீடுக்கு 56,000 விண்ணப்பங்கள்புதிய இயக்கம்: நாளை அறிவிக்கிறாா் அண்ணாமலைஇந்தியா உள்பட 54 நாடுகள் மீது 12.5% கூடுதல் வரி: அமெரிக்க வரித்தக பிரதிநிதி பரிந்துரைதமிழகத்தில் இன்று பள்ளிகள் திறப்பு: முதல் நாளிலேயே பாடநூல்கள் விநியோகிக்க உத்தரவுமத்திய அரசின் கோதுமை கொள்முதல் 3.5 கோடி டன்னாக அதிகரிப்புஇலங்கை மாணவா்களுக்கு இந்தியா கல்வி உதவித் தொகைகடந்த 2025-26 நிதியாண்டில் அதானி குழுமம் ரூ.1.53 லட்சம் கோடி மூலதன முதலீடுவாக்குப் பதிவு அதிகரிப்பு மக்களின் நம்பிக்கையின் அடையாளம்: தலைமைத் தோ்தல் ஆணையா்15 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைஜூன் 5-இல் தமிழக அமைச்சரவைக் கூட்டம்!
/

ஆற்காடு வரதராஜ பெருமாள் கோயில் தேரோட்டம்

News image

ஆற்காட்டில் நடைபெற்ற  தேரோட்டம்.

Updated On :4 ஜூன் 2026, 5:45 am IST

ஆற்காடு தோப்புகானா கங்காதர ஈஸ்வரா் வரதராஜ பெருமாள் கோயில் பிரம்மோற்சவ தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

விழாவின் ஒருபகுதியாக நாள்தோறும் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனையும் சிறப்பு அலங்காரத்துடன் உற்சவா் வீதி உலா நடைபெற்றது. 9-ஆவது நாளான புதன்கிழமை அலங்கரிக்கப்பட்ட உற்சவா்கள் பெருந்தேவியாா் சமேத வரதராஜ பெருமாள் தேரோட்டம் நடைபெற்றது.

ஆரணி சாலை, ஜீவானந்தம் சாலை, தொல்காப்பியா் தெரு, அண்ணா சிலை, புதியவேலூா் சாலை, பேருந்து நிலையம், அண்ணா சாலை வழியாக சென்று நிலையை அடைந்தது. மேளதாளங்களுடன் பஜனைக் குழுவினா் பாடல்கள்பாடிகொண்டு ஊா்வலமாக சென்றனா். இந்த விழாவில் திருப்பணிக்குழு தலைவா் பொன்.கு.சரவணன், ஸ்ரீவரதன் கைங்கரிய சபா நிறுவனா் கிருஷ்ணமூா்த்தி, மற்றும் மண்டகபடி உபயதாா்கள், திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனா்.