மாநகராட்சிகளில் 24 மணிநேரமும் தடையற்ற குடிநீர்! முதல்வர் விஜய் உத்தரவுஓமன் கடல்பகுதியில் தீப்பிடித்த எண்ணெய்க் கப்பல்: 24 மாலுமிகளை மீட்ட இந்திய கடற்படை!பங்குச் சந்தை சரிவு எதிரொலி: முதலீட்டாளர்களுக்கு ரூ. 6.31 லட்சம் கோடி இழப்பு!இந்தியா கூட்டணி ஆலோசனை கூட்டத்தில் இடம்பிடித்த கரப்பான் பூச்சி கட்சி!எம்.எல்.ஏ., எம்.பி.யை பாஜக வாங்கலாம்! மக்களை வாங்க முடியாது - காங்கிரஸ் என் பெயர், புகைப்படத்தை பயன்படுத்த வேண்டாம் : அண்ணாமலைபிலிப்பின்ஸில் பயங்கர நிலநடுக்கம்: பலி 32-ஆக உயர்வு!
/

ராணிப்பேட்டை: மதுவிலக்கு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் இன்று ஏலம்!

ராணிப்பேட்டை மாவட்ட காவல் துறை தரப்பில், மதுவிலக்கு குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் செவ்வாய்க்கிழமை பொது ஏலம் விடப்பட உள்ளது.

News image

ஏலம் விடுவதற்காக வைக்கப்பட்டிருக்கும் வாகனங்கள் - கோப்புப்படம்

Updated On :9 ஜூன் 2026, 2:11 am IST

ராணிப்பேட்டை மாவட்ட காவல் துறை தரப்பில், மதுவிலக்கு குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் செவ்வாய்க்கிழமை பொது ஏலம் விடப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: ராணிப்பேட்டை மாவட்டம் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் துறையினரால் மதுவிலக்கு குற்ற வழக்குகளில் கைப்பற்றப்பட்ட 19 இரு சக்கர வாகனங்களின் பொது ஏலம் ராணிப்பேட்டை மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் காவல் கண்காணிப்பாளா் தலைமையில்,ஜூன் 9 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 10 மணி அளவில் நடைபெற உள்ளது.

இந்த பொது ஏலத்தில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவா்கள் ஆதாா் அடையாள அட்டையுடன் ரூ.100 /-யை நுழைவு கட்டணம் செலுத்திய பின் ஏலம் கேட்க அனுமதிக்கப்படுவா். ஏலம் எடுத்த வாகனத்திற்குண்டான ரசீதே அவ்வாகனத்தின் உரிமை ஆவணமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.