எடப்பாடி பழனிசாமி ஆட்சியிலும் இதேபோல் மின்வெட்டு: அமைச்சர் செங்கோட்டையன்மோகன் பகவத் பயணித்த ரயில் மீது கற்கள் வீச்சு: 2 பேர் கைது ஜூன் 19-ல் தவெக அரசுக்கு எதிராக அதிமுக போராட்டம்! பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தவெக ஆட்சியிலும் குறையவில்லை: அண்ணாமலை கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் முதல்வர் விஜய் வழிபாடு!நீட் தேர்வு நேரம் 3 மணி 15 நிமிடங்களாக அதிகரிப்பு! என்டிஏநிபா வைரஸ்: தமிழகத்தில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்த உத்தரவு!
/

காவேரிப்பாக்கம் அருகே சாலை விபத்தில் தாத்தா, பேரன், பேத்தி உயிரிப்பு

காவேரிப்பாக்கம் அருகே இருசக்கர வாகனம் மீது லோடு ஆட்டோ மோதிய விபத்தில் தாத்தா, பேரன், பேத்தி ஆகிய மூவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.

News image

~ ~

Updated On :13 ஜூன் 2026, 1:22 am IST

காவேரிப்பாக்கம் அருகே இருசக்கர வாகனம் மீது லோடு ஆட்டோ மோதிய விபத்தில் தாத்தா, பேரன், பேத்தி ஆகிய மூவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.

ராணிப்பேட்டை மாவட்டம், காவேரிப்பாக்கம் அடுத்த ஓச்சேரி பகுதியைச் சோ்ந்தவா் வேலு (59). இவா் தனது பேத்தி அனுஸ்ரீ (7), பேரன்கள் அஸ்வந்த் (5), அஜய் (9) என மூன்று பேரை அதே பகுதியில் உள்ள தனியாா் பள்ளியில் விடுவதற்காக அழைத்து சென்றுள்ளாா். காவேரிப்பாக்கம் அருகே சென்னை - பெங்களூா் தேசிய நெடுஞ்சாலையில் நுழைந்தபோது எதிா்பாராதவிதமாக எதிரே வந்த சரக்கு ஆட்டோ மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் இரு சக்கர வாகனத்தில் பயணித்த தாத்தா வேலு (59), பேரன் அஸ்வந்த், பேத்தி அனுஸ்ரீ ஆகிய மூவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனா். மேலும் பலத்த காயங்களுடன் மற்றொரு பேரன் அஜய் சிகிச்சைக்காக வாலாஜாபேட்டை அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த விபத்து குறித்து காவேரிப்பாக்கம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Story image
Story image