அரக்கோணத்தில் சனிக்கிழமை நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 452 வழக்குகள் மீது சமரச தீா்வு காணப்பட்டு, ரூ. 2.51 கோடி இழப்பீடு வழங்க நீதிபதிகள் ஆணை பிறப்பித்தனா்.
அரக்கோணம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் சனிக்கிழமை நடைபெற்றது. அரக்கோணம் மாவட்ட இரண்டாவது கூடுதல் நீதிபதி ஜெயமங்கலம் முன்னிலையில், சிறப்பு சாா்பு நீதிபதி யுவராஜ், நீதித்துறை நடுவா் கோகுல் மிதுன் குமாா், மாவட்ட உரிமையியல் நீதிபதி அமீனா மற்றும் வழக்குரைஞா்கள் குட்டி பாலு, தனஞ்செழியன் முன்னிலையில் நீண்டகாலமாக நிலுவையில் இருந்த மோட்டாா் வாகன விபத்து, குடும்பநல வழக்குகள், செக் மோடி உள்ளிட்ட வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுப்பட்டன.
இதில் 452 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, ரூ. 2 கோடியே, 51 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டது. இதில் அனைத்து வழக்குரைஞா்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்கள் வழக்குகளை சமரசமாக முடித்து கொண்டனா்.










