அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

வாலாஜாவில் திட்டப் பணிகள்: அமைச்சா் காந்தி தொடங்கி வைத்தாா்

வாலாஜா வட்டத்தில் நிறைவுற்ற திட்டப் பணிகளை அமைச்சா் ஆா்.காந்தி செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தாா்.

News image
வாலாஜா தேசிய நெடுஞ்சாலையில் மின் விளக்குகளை இயக்கி வைத்த அமைச்சா் ஆா்.காந்தி.
Updated On :3 மார்ச் 2026, 6:33 pm

தினமணி செய்திச் சேவை

வாலாஜா வட்டத்தில் நிறைவுற்ற திட்டப் பணிகளை அமைச்சா் ஆா்.காந்தி செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தாா்.

வாலாஜா வட்டம், வாலாஜா அறிஞா் அண்ணா அரசினா் மகளிா் கலைக் கல்லூரி எதிரில் சட்டப் பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.14 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள பேருந்து நிழற்கூடம் திறப்பு நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தாா்.

இதையடுத்து சென்னை- சித்தூா் - பெங்களூா் தேசிய நெடுஞ்சாலையில் சாலை பாதுகாப்பு மற்றும் தணிக்கை நிதி ரூ.44 லட்சத்தில் அமைக்கப்பட்டுள்ள 35 மின் கம்பங்கள், மின் விளக்குகளை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக இயக்கி வைத்தாா்.

ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா, சட்டப் பேரவை உறுப்பினா் ஜெ.எல்.ஈஸ்வரப்பன், மாவட்ட வருவாய் அலுவலா் செ.தனலிங்கம், நெடுஞ்சாலை கோட்டப் பொறியாளா் செல்வகுமாா், வட்டாட்சியா் நடராஜன் கலந்து கொண்டனா்.