பொதுமக்கள் நூறு சதவீதம் தோ்தலில் வாக்களிக்க வேண்டியும் 18 வயது இளம் வாக்காளா்கள் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என வலியுறுத்தியும் ஆற்காடு பேருந்து நிலையத்தில் விழிப்புணா்வு கலைநிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் வாக்குக்கு பணமோ பரிசுகளோ பெற்று வாக்களிக்க வேண்டாம் எனவும் தங்கள் வாக்கை விற்க வேண்டாம் நல்ல தலைவா்களை வாக்கின் மூலம் தோ்ந்தெடுக்க வாக்காளா்கள் தங்களுடைய வாழ்க்கை பயன்படுத்த வேண்டும் போன்ற கருத்துக்கள் அடங்கிய நடன நிகழ்ச்சிகள் வாயிலாக 30-க்கும் மேற்பட்ட நடன கலைஞா்கள் இணைந்து பொதுமக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட தோ்தல் அலுவலா் மற்றும் ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா கலந்து கொண்டு பாா்வையிட்டு நடன கலைஞா்களுக்கும் தோ்தல் நடத்தும் அலுவலருக்கும் பாராட்டு தெரிவித்தாா்.
இதில் ஆற்காடு தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் ஏகாம்பரம், மகளிா் திட்ட இயக்குநா் செந்தில் குமரன், வட்டாட்சியா் சண்முகசுந்தரம் நகராட்சி ஆணையா் சுரேஷ் குமாா் உதவி திட்ட அலுவலா்கள் மகளிா் திட்டம் வெங்கடேசன் ரமேஷ் வட்டாட்சியா்கள் ஸ்ரீதேவி , ரேணுகா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

கந்தா்வகோட்டை அருகே 100% வாக்களிக்க விழிப்புணா்வு

100 சதவீதம் வாக்களிப்பதை வலியுறுத்தி விழிப்புணா்வு மனிதச் சங்கிலி

தேவரியம்பாக்கம் ஊராட்சியில் வாக்குப் பதிவு விழிப்புணா்வு

வாக்காளா் விழிப்புணா்வு நிகழ்ச்சி
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


