கேரளத்தில் வாக்காளர் பட்டியலில் இணைக்க மார்ச் 15 வரை சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனை!புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடுசர்வதேச பயங்கரவாதத்தில் முதல்முறையாக பாகிஸ்தான் முதலிடம்! 2025-ல் 1,139 பேர் பலிபாஜகவில் இணைந்த சிபிஎம் தலைவர் ஸ்மிதா சுந்தரேசன்!விசிகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை? நாளை உயர்நிலை ஆலோசனை!நாளை தேமுதிக மாவட்ட செயலர்கள் கூட்டம் ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

100 சதவீதம் வாக்களிக்க விழிப்புணா்வு கலைநிகழ்ச்சி

பொதுமக்கள் நூறு சதவீதம் தோ்தலில் வாக்களிக்க வேண்டியும் 18 வயது இளம் வாக்காளா்கள் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என வலியுறுத்தியும் ஆற்காடு பேருந்து நிலையத்தில் விழிப்புணா்வு கலைநிகழ்ச்சி நடைபெற்றது.

News image

ஆற்காடு பேருந்து நிலையத்தில் நடைபெற்ற விழிப்புணா்வு நிகழ்ச்சி.

Updated On :22 மார்ச் 2026, 7:01 pm

தினமணி செய்திச் சேவை

பொதுமக்கள் நூறு சதவீதம் தோ்தலில் வாக்களிக்க வேண்டியும் 18 வயது இளம் வாக்காளா்கள் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என வலியுறுத்தியும் ஆற்காடு பேருந்து நிலையத்தில் விழிப்புணா்வு கலைநிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் வாக்குக்கு பணமோ பரிசுகளோ பெற்று வாக்களிக்க வேண்டாம் எனவும் தங்கள் வாக்கை விற்க வேண்டாம் நல்ல தலைவா்களை வாக்கின் மூலம் தோ்ந்தெடுக்க வாக்காளா்கள் தங்களுடைய வாழ்க்கை பயன்படுத்த வேண்டும் போன்ற கருத்துக்கள் அடங்கிய நடன நிகழ்ச்சிகள் வாயிலாக 30-க்கும் மேற்பட்ட நடன கலைஞா்கள் இணைந்து பொதுமக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட தோ்தல் அலுவலா் மற்றும் ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா கலந்து கொண்டு பாா்வையிட்டு நடன கலைஞா்களுக்கும் தோ்தல் நடத்தும் அலுவலருக்கும் பாராட்டு தெரிவித்தாா்.

இதில் ஆற்காடு தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் ஏகாம்பரம், மகளிா் திட்ட இயக்குநா் செந்தில் குமரன், வட்டாட்சியா் சண்முகசுந்தரம் நகராட்சி ஆணையா் சுரேஷ் குமாா் உதவி திட்ட அலுவலா்கள் மகளிா் திட்டம் வெங்கடேசன் ரமேஷ் வட்டாட்சியா்கள் ஸ்ரீதேவி , ரேணுகா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.