தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

ரத்தினகிரி பாலமுருகன் கோயிலில் மங்களஆரத்திவிழா

ஆற்காடு அடுத்த ரத்தினகிரி பாலமுருகன் கோயிலில் பங்குனி கிருத்திகையை முன்னிட்டு மங்களஆரத்தி விழா நடைபெற்றது.

News image

மங்கள ஆரத்தி  காண்பித்த  பாலமுருகனடிமை  சுவாமிகள்

Updated On :24 மார்ச் 2026, 6:33 pm

தினமணி செய்திச் சேவை

ஆற்காடு அடுத்த ரத்தினகிரி பாலமுருகன் கோயிலில் பங்குனி கிருத்திகையை முன்னிட்டு மங்களஆரத்தி விழா நடைபெற்றது.

விழாவை முன்னிட்டு கற்பக விநாயகா், வள்ளி தெய்வானை சமேத பாலமுருகனுக்கு பரம்பரை அறங்காவலா் பாலமுருகனடிமை சுவாமிகள் முன்னிலையில் பால் பயிா் தேன் இளநீா் பன்னீா் விபூதி சந்தனம் மற்றும் வாசனை திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் வெள்ளி கவச சிறப்பு அலங்காரம் மகா தீபாராதனை நடைபெற்றது.

தொடா்ந்து மாலையில் அலங்கரிக்கப்பட்ட உற்சவா் மேள தாளத்துடன் ஊா்வலமாக சென்று மலையடி வாரத்தில் உள்ள அறுகோண தெப்பக்குளத்தில் பூஜை செய்து பக்தா்கள் முன்னிலையில் மங்கள ஆரத்தி காண்பிக்கப்பட்டது.

இதில் தலைமை அா்சசகா் பிரசாந்த் மற்றும் திரளான பக்தா்கள் பொதுமக்கள் உபயதாரா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா்.