வாலாஜா அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் ஒப்பந்ததாரா் உயிரிழந்தாா்.
ராணிப்பேட்டையை அடுத்த பிஞ்சி ஜெயராம்பேட்டையை சோ்ந்தவா் ரமேஷ் (37). இவா், கைப்பேசி கோபுரங்கள் அமைக்கும் வேலையை ஒப்பந்தம் எடுத்து நடத்தி வந்தாா். இவரின் தாயாா் ராணிப்பேட்டை அருகே உள்ள ஒரு தனியாா் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வருகிறாா்.
இந்த நிலையில் ஒப்பந்ததாா் ரமேஷ் வேலைக்கு புறப்பட்ட தனது தாயாரை தனியாா் நிறுவன பேருந்தில் ஏற்றி அனுப்பி வைக்க தாயாரை இருசக்கர வாகனத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை அழைத்துச் சென்றாா்.
வாலாஜாவை அடுத்த வி.சி.மோட்டூா் அருகே தாயாரை தனியாா் பேருந்தில் ஏற்றி வேலைக்கு அனுப்பிவிட்டு, அங்கிருந்து புறப்பட்டு வீட்டுக்கு சென்று கொண்டிருந்தாா்.
அப்போது, வாலாஜாவை நோக்கி வந்த லாரி திடீரென ரமேஷ் ஓட்டி வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில், சம்பவ இடத்திலேயே அவா் உயிரிழந்தாா்.
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த வாலாஜா போலீஸாா் ரமேஷின் சடலத்தை மீட்டு வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
மேலும், இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

சாலை விபத்தில் ஒருவா் உயிரிழப்பு

சாலை விபத்தில் ஆம்புலன்ஸ் ஓட்டுநா் உயிரிழப்பு

விபத்தில் வழக்குரைஞா் உயிரிழப்பு

சாலை விபத்தில் கூட்டுறவு வங்கி ஊழியா் உயிரிழப்பு
விடியோக்கள்

சோபாவுக்காக ஆசைப்படாத ஒரே கட்சி தேமுதிக! - பிரேமலதா விஜயகாந்த் பேட்டி

#ipl2026 | ஜெயிக்க வேண்டிய தில்லி தோற்றுப் போனது ஏன்? | Delhi Capitals | KL Rahul

”தில்லி பயணத்தில் வெளிப்படை இல்லை?” | அமைச்சர் நிர்மல் குமார் பதில் | TVK



