வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

ஆம்பூர் அருகே 15 டன் ரேஷன் அரிசி, லாரியுடன் பறிமுதல்

ஆம்பூர் அருகே 15 டன் ரேஷன் அரிசியை லாரியுடன் அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

News image
Updated On :4 ஆகஸ்ட் 2020, 7:14 am

DIN

ஆம்பூர் அருகே 15 டன் ரேஷன் அரிசியை லாரியுடன் அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

ஆம்பூர் அருகே திருப்பத்தூர் மாவட்ட எல்லை பகுதியில் சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்பட்டுள்ள மாதனூர் சோதனைசாவடியில் அவ்வழியாக வந்த லாரியை ஆம்பூர் வட்டாட்சியர் பத்மநாபன், திருப்பத்தூர் பறக்கும் படை துணை வட்டாட்சியர் பழனி, வாணியம்பாடி துணை வட்டாட்சியர் குமார் ஆகியோர் தலைமையில் அதிகாரிகள் நேற்றிரவு சோதனை மேற்கொண்டனர். 

அப்போது லாரியில் கடத்த ரேஷன் அரிசி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து 15 டன் ரேஷன் அரிசியை லாரியுடன் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் இதுதொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். போலி பதிவெண் கொண்ட லாரிகள் மூலம் ஆந்திரத்திற்கு தொடர்ந்து ரேஷன் அரிசி கடத்துவது வழக்கமாக உள்ளது. 

கடத்துபவர்கள் மீது துறை அதிகாரிகள் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.