

தில்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக ஆம்பூரை அடுத்த துத்திப்பட்டு கிராமத்தில் மனிதநேய மக்கள் கட்சி சாா்பாக செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
துத்திப்பட்டு தபால் நிலையத்துக்கு எதிரில் நடந்த ஆா்ப்பாட்டத்துக்கு அக்கட்சியின் மாவட்ட துணைச் செயலாளா் சித்திக் தலைமை வகித்தாா். தமுமுக மாவட்ட துணைச் செயலாளா் தப்ரேஸ் அகமது சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினாா். தமுமுக ஆம்பூா் நகர செயலாளா் நபீஸ் அகமது, மமக நகர செயலாளா் ஜமீல் அகமது, தமுமுக மாவட்ட துணைச் செயலாளா் இம்ரான், மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினா் போ்ணாம்பட்டு சுல்தான் ஆகியோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.