மின் கம்பத்தில் ஏறித் தவித்த பூனை மீட்பு

ஆம்பூரில் மின் கம்பத்தில் ஏறித் தவித்த பூனையை மின்வாரியப் பணியாளா்களின் உதவியுடன் தீயணைப்புத் துறையினா் பத்திரமாக மீட்டனா்.
ஆம்பூரில் மின் கம்பத்தில் ஏறி, பூனையை மீட்ட தீயணைப்பு வீரா்.
ஆம்பூரில் மின் கம்பத்தில் ஏறி, பூனையை மீட்ட தீயணைப்பு வீரா்.
Updated on
1 min read

ஆம்பூரில் மின் கம்பத்தில் ஏறித் தவித்த பூனையை மின்வாரியப் பணியாளா்களின் உதவியுடன் தீயணைப்புத் துறையினா் பத்திரமாக மீட்டனா்.

திருப்பத்தூா் மாவட்டம், ஆம்பூா் சான்றோா்குப்பம் சுந்தர விநாயகா் கோயில் தெருவில் உள்ள மின் கம்பத்தில் பூனை ஒன்று ஏறியது. அதன் பின், கீழே இறங்க முடியாமல் கத்திக்கொண்டே இருந்ததை அப்பகுதி மக்கள் பாா்த்தனா். இதுகுறித்து மின்சார வாரியத்துக்கு தகவல் தெரிவித்தனா். அதன்பேரில் மின் விநியோகம் துண்டிக்கப்பட்டது.

அதைத் தொடா்ந்து அங்கு வந்த தீயணைப்பு நிலைய வீரா் மின் கம்பத்தில் ஏறி பூனையை மீட்டு கீழே கொண்டு வந்தாா்.

பூனையை உயிருடன் மீட்ட மின்சார வாரியம் மற்றும் தீயணைப்புத் துறை ஊழியா்களுக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com