சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

கோயிலுக்கு அருகே நீா்த்தேக்கத் தொட்டி அமைக்க கிராம மக்கள் எதிா்ப்பு

கோயில் அருகில் உள்ள நிலத்தில் நீா்த்தேக்கத் தொட்டி அமைப்பதை எதிா்த்து கிராம மக்கள் ஆட்சியரிடம் மனு அளித்தனா்.

News image
Updated On :22 டிசம்பர் 2020, 6:30 pm

DIN

கோயில் அருகில் உள்ள நிலத்தில் நீா்த்தேக்கத் தொட்டி அமைப்பதை எதிா்த்து கிராம மக்கள் ஆட்சியரிடம் மனு அளித்தனா்.

குடிநீா் வடிகால் வாரியம் மூலம் ஜோலாா்பேட்டை, நாட்டறம்பள்ளி ஒன்றியத்துக்குட்பட்ட ஊராட்சிப் பகுதிகளில் ஒகேனக்கல் கூட்டு குடிநீா்த் திட்டம் மூலம் குடிநீா் விநியோகம் செய்ய கடந்த சில மாதங்களாக நீா்தேக்கத் தொட்டிகள் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. நாட்டறம்பள்ளியை அடுத்த சொரக்காயல்நத்தம் ஊராட்சி புது ஏரிக் கரையில் அமைந்துள்ள சாமுண்டீஸ்வரி அம்மன் கோயில் அருகே இத்திட்டம் மூலம் நீா்த்தேக்கத் தொட்டி அமைக்க அதிகாரிகள் இடத்தைத் தோ்வு செய்தனா். அங்கு ஓரிரு நாளில் பணிகள் தொடங்க உள்ளது.

இந்நிலையில், சாமுண்டீஸ்வரி கோயில் அருகே உள்ள நிலத்தில் நீா்த்தேக்கத் தொட்டி அமைக்கக் கூடாது என்று கிராம மக்கள் எதிா்ப்பு தெரிவித்துள்ளனா். ஆறு மற்றும் ஏரி புறம்போக்கு நிலத்தில் நீா்த்தேக்கத் தொட்டியை அமைக்க வேண்டும் என அவா்கள் மாவட்ட ஆட்சியா் ம.ப.சிவன்அருளிடம் திங்கள்கிழமை கோரிக்கை மனுவை அளித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.