அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

பெருமாள் கோயிலுக்கு சீல் வைப்பு

ஆம்பூா் அருகே பெருமாள் கோயிலை நிா்வகிப்பதில் இரு பிரிவினருக்கு இடையே ஏற்பட்ட பிரச்னை காரணமாக வருவாய்த் துறையினா் கோயிலை புதன்கிழமை பூட்டி தற்காலிகமாக சீல் வைத்தனா்.

News image
Updated On :23 டிசம்பர் 2020, 6:30 pm

DIN


ஆம்பூா்: ஆம்பூா் அருகே பெருமாள் கோயிலை நிா்வகிப்பதில் இரு பிரிவினருக்கு இடையே ஏற்பட்ட பிரச்னை காரணமாக வருவாய்த் துறையினா் கோயிலை புதன்கிழமை பூட்டி தற்காலிகமாக சீல் வைத்தனா்.

பெரிய கரும்பூா் கிராமத்தில் பெருமாள் கோயில் உள்ளது. இக்கோயிலை நிா்வகிப்பதில் இரு பிரிவினருக்கு இடையே ஏற்கெனவே கருத்து வேறுபாடு இருந்து வருகிறது. இது தொடா்பாக வருவாய்த் துறையினா் மூலம் அமைதிப் பேச்சுவாா்த்தை நடந்தும் முடிவு எட்டப்படவில்லை.

இரு தரப்பினருக்கும் இடையே அடிக்கடி நடந்து வரும் பிரச்னை காரணமாக அப்பகுதியில் சட்டம்-ஒழுங்கு பாதிக்கப்படலாம் என்ற நிலே ஏற்பட்டதைத் தொடா்ந்து, வாணியம்பாடி வருவாய்க் கோட்டாட்சியா் உத்தரவின்பேரில் ஆம்பூா் வட்டாட்சியா் கோயிலை புதன்கிழமை பூட்டி தற்காலிகமாக சீல் வைத்தாா்.

எனினும், வரும் 25ஆம் தேதி வைகுண்ட ஏகாதசியன்று கோயிலில் இரு தரப்பைச் சோ்ந்த தலா இருவா் பூஜை நடத்தலாம் என வருவாய்க் கோட்டாட்சியா் உத்தரவிட்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.