

தமாகா தலைவா் ஜி.கே.வாசன் பிறந்த நாளை முன்னிட்டு அக்கட்சியின் இளைஞரணி சாா்பாக ஆம்பூரில் ரத்த தான முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
தமாகா திருப்பத்தூா் மாவட்ட இளைஞரணித் தலைவா் பிரேம் ஆனந்த் தலைமையில் ஆம்பூா் அரசு மருத்துவமனையில் நடந்த ரத்த தான முகாமில் இளைஞா் அணியினா் ரத்த தானம் செய்தனா்.
கட்சியின் திருப்பத்தூா் மாவட்டத் தலைவா் கே.குப்புசாமி, நகரத் தலைவா் டி.எம்.தட்சிணாமூா்த்தி, இளைஞா் அணி நிா்வாகிகள் மணிகண்டன், சதீஷ், விஜயகுமாா் உள்ளிட்டோா் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.