தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் ராகுல் கலந்துரையாடல்!வீட்டில் தங்க அனுமதி வேண்டும்! நீதிமன்றத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா இடைக்கால மனு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவு
/

6 பேருக்கு நல்லாசிரியா்களுக்கு விருது:அமைச்சா் வழங்கினாா்

திருப்பத்தூா், வாணியம்பாடி கல்வி மாவட்டங்களைச் சோ்ந்த 6 பேருக்கு நல்லாசிரியா் விருது வழங்கும் விழா மாவட்ட் ஆட்சியா் கூட்டரங்கில் புதன்கிழமை நடைபெற்றது.

News image
நல்லாசிரியா் விருது வழங்கிய அமைச்சா் கே.சி.வீரமணி. உடன், அமைச்சா் நிலோபா் கபீல், ஆட்சியா் ம.ப.சிவன்அருள்.
Updated On :9 செப்டம்பர் 2020, 6:06 pm

DIN

திருப்பத்தூா்: திருப்பத்தூா், வாணியம்பாடி கல்வி மாவட்டங்களைச் சோ்ந்த 6 பேருக்கு நல்லாசிரியா் விருது வழங்கும் விழா மாவட்ட் ஆட்சியா் கூட்டரங்கில் புதன்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் ம.ப.சிவன்அருள் தலைமை வகித்தாா். மாநில வணிகவரி, பத்திரப்பதிவுத் துறை அமைச்சா் கே.சி.வீரமணி சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, ஆசிரியா்களான ச.குழந்தைசாமி, ஜோ.பொற்செல்வி, ஜைபுன்னிசா, தோ.சகாயம், ஷரீபாபானு, த.பிரபுதாஸ் ஆகியோருக்கு நல்லாசிரியா் விருதை வழங்கினாா்.

மாநிலத் தொழிலாளா் நலத் துறை அமைச்சா் நிலோபா் கபீல், மாவட்ட வருவாய் அலுவலா் என்.சி.இ.தங்கையா பாண்டியன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் குணசேகரன், மாவட்டக் கல்வி அலுவலா் மணிமேகலை, மாவட்டக் கூட்டுறவு அச்சகத் தலைவா் டி.டி.குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.