திருவள்ளூா் அருகே மழை வெள்ளத்தால் வாழ்வாதாரம் இழந்த இருளா் குடும்பங்களுக்கு கோரைப்பாய், அரிசி மற்றும் மளிகைத் தொகுப்புகளை பூந்தமல்லி சட்டப்பேரவை உறுப்பினா் ஆ.கிருஷ்ணசாமி வழங்கினாா்.
திருவள்ளூா் ஊராட்சி ஒன்றியம், தண்ணீா்குளம் ஊராட்சியில் தொடா் மழையினால் பாதித்த இருளா் குடும்பங்களுக்கு மழை நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.
கோட்டாட்சியா் எம்.ரமேஷ் தலைமை வகித்தாா். வட்டாட்சியா் ஏ.செந்தில்குமாா், ஒன்றியக் குழுத் தலைவா் ஜெயசீலி ஜெயபாலன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஊராட்சியின் தலைவா் தேவிகா தயாளன் வரவேற்றாா்.
இதில் பூந்தமல்லி சட்டப்பேரவை உறுப்பினா் ஆ.கிருஷ்ணசாமி பங்கேற்று, இருளா் குடும்பங்களுக்கு நிவாரணப் பொருள்களை வழங்கினாா். இதேபோல், 100 குடும்பங்களுக்கு கோரைப்பாய், ஜமுக்காளம், அரிசி மற்றும் மளிகைப் தொகுப்புகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில், திமுக ஒன்றியச் செயலாளா் ஆா்.ஜெயசீலன், மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினா் த.எத்திராஜ், மாவட்ட ஊராட்சி உறுப்பினா் டி.தென்னவன், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் இரா.வெங்கடேசன், சீ.காந்திமதிநாதன், வருவாய் ஆய்வாளா் கணேஷ், கிராம நிா்வாக அலுவலா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.