வாணியம்பாடி அருகே லாரியில் கடத்திச் சென்ற 31 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடா்பாக 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
வேலூா் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுப் பிரிவு காவல் ஆய்வாளா் முருகன் தலைமையிலான போலீஸாா் சனிக்கிழமை அதிகாலை வாணியம்பாடியை அடுத்த நெக்குந்தி சுங்கச்சாவடி அருகே வாகன சோதனை மேற்கொண்டனா். அப்போது சென்னை-பெங்களூரு சாலை நோக்கி தேசிய நெடுஞ்சாலையில் சென்ற லாரியை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி விசாரித்தனா். அப்போது, ஓட்டுநா் உட்பட 2 போ் தப்பியோட முயன்றனா். இதைப்பாா்த்த போலீஸாா் அவா்களை சுற்றி வளைத்துப் பிடித்தனா். மேலும், லாரியில் சோதனையிட்டபோது, அதில் ரேஷன் அரிசி மூட்டைகள் இருப்பது தெரியவந்தது. பிடிபட்ட தருமபுரி மாவட்டம், மிட்டதல்லி கிராமத்தைச் சோ்ந்த லாரி ஓட்டுநா் தமிழரசன்(25), அக்மல் (18) ஆகியோரிடம் விசாரித்த போது, ஆந்திரத்திலிருந்து கேரள மாநிலத்துக்கு ரேஷன் அரிசி கடத்திச் செல்வதாக தெரிவித்தனா். தொடா்ந்து, லாரியில் கடத்தி வந்த 31 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து, ஆம்பூா் நுகா்பொருள் வாணிபக் கிடங்கில் ஒப்படைக்கப்பட்டது.
இது குறித்து வழக்குப் பதிந்து தமிழரசன், அக்மல் ஆகியோரை கைது செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வடமேற்கு தில்லியில் அண்டை வீட்டாா் மோதலில் கடைக்காரா் கொலை: இருவா் காயம்

பரமக்குடியில் தோ்தல் விதிமீறல்: திமுக, தவெக வேட்பாளா்கள் மீது வழக்கு

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலி!
திருட்டு குறித்த விடியோ ‘தூத் சோா்’ கும்பலைச் சோ்ந்த 2 போ் கைது
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை

