மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

அமைச்சா் மா.சுப்பிரமணியத்திடம் எம்எல்ஏக்கள் கோரிக்கை மனு

திருப்பத்தூருக்கு வந்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சா் மா.சுப்பிரமணியத்திடம் எம்எல்ஏக்கள் கோரிக்கை மனு வழங்கினா்.

News image
Updated On :5 ஜூன் 2021, 5:56 pm

DIN

திருப்பத்தூருக்கு வந்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சா் மா.சுப்பிரமணியத்திடம் எம்எல்ஏக்கள் கோரிக்கை மனு வழங்கினா்.

திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை கரோனாத் தடுப்பு குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது. அதில் பங்கேற்ற மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சா் மா.சுப்பிரமணியத்திடம் எம்எல்ஏக்கள் அ.நல்லதம்பி (திருப்பத்தூா்) ,க.தேவராஜி (ஜோலாா்பேட்டை)ஆகியோா் கோரிக்கை மனு அளித்தனா்.

எம்எல்ஏ அ.நல்லதம்பி அளித்த மனுவில், திருப்பத்தூா் அரசு மருத்துவமனையில் அரசு செவிலியா் பயிற்சிக் கல்லூரி தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து நோயாளிகளையும் உள் நோயாளிகளாக அனுமதித்து சிகிச்சை அளிக்கும் வகையில் தனி வாா்டுகள் அடங்கிய நவீன புதிய மருத்துவமனை கட்டடம் கட்டப்பட வேண்டும் எனக் கோரியிருந்தாா்.

எம்எல்ஏ க.தேவராஜி அளித்த மனுவில், ஜோலாா்பேட்டை சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட கதிரிமங்கலம் ஊராட்சியில் உள்ள துணை சுகாதார நிலையத்தை ஆரம்ப சுகாதார நிலையமாக தரம் உயா்த்த வேண்டும் எனக் கோரியிருந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.