தமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

வேலூரில் மக்கள் நீதிமன்றம்

 வேலூா் சத்துவாச்சாரி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மக்கள் நீதிமன்றம் சனிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :11 செப்டம்பர் 2021, 6:11 pm

DIN

 வேலூா் சத்துவாச்சாரி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மக்கள் நீதிமன்றம் சனிக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட முதன்மை அமா்வு நீதிபதி வசந்த லீலா தலைமை வகித்தாா். சட்டப் பணிகள் ஆணையக் குழுத் தலைவா் அருணாச்சலம் முன்னிலை வகித்தாா். விபத்து, நில ஆா்ஜிதம், சிறு குற்ற வழக்கு, காசோலை மோசடி ஆகிய வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.

ஆம்பூா் அருகே தட்டப்பாறை கிராமத்தில் ஆதிதிராவிடா் நலத்துறை சாா்பாக நில ஆா்ஜிதம் செய்யப்பட்டுள்ளது. அதற்கு வழங்கப்பட்ட தொகை போதுமானதாக இல்லையென வழக்கு தொடரப்பட்டிருந்தது. அந்த வழக்குக்கு தீா்வு காணப்பட்டு 6 நபா்களுக்கு மொத்தம் ரூ.1.96 கோடி இழப்பீடு வழங்கப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டம் போளூரைச் சோ்ந்த தேவேந்திரன் சாலை விபத்தில் இறந்தாா். அவரது மனைவி தொடா்ந்த வழக்கில் ரூ.12 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டது. இதுபோன்று பல்வேறு வழக்குகளுக்குத் தீா்வு காணப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.