தமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

15 சிறுமிகளின் திருமணம் தடுத்து நிறுத்தம்

 ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற இருந்த 15 சிறுமிகளின் திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டது.

News image
Updated On :11 செப்டம்பர் 2021, 6:13 pm

DIN

 ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற இருந்த 15 சிறுமிகளின் திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டது.

வெள்ளிக்கிழமை விநாயகா் சதுா்த்தி அன்று சுபமுகூா்த்த தினமாக இருந்ததால் வேலூா் ஒருங்கிணைந்த மாவட்டத்தில் திருமணங்கள் நடைபெற்றன. அதே நாளில் குழந்தை திருமணம் நடைபெற உள்ளதாக மாவட்ட சமூக நல அலுவலகத்துக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், சமூக நலத் துறை, சைல்ட் லைன் அமைப்பு மற்றும் காவல் துறையினா் அடங்கிய குழுவினா் வேலூா், திருப்பத்தூா் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் திடீா் சோதனை நடத்தினா்.

அப்போது வேலூா் மாவட்டத்தில் 3 சிறுமிகள், திருப்பத்தூா் மாவட்டத்தில் 8 சிறுமிகள், ராணிப்பேட்டை மாவட்டத்தில் 4 சிறுமிகள் என மொத்தம் 15 சிறுமிகளுக்கு திருமணம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது தெரியவந்தது. அதன்பேரில், அந்த திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டு, சிறுமிகள் மீட்கப்பட்டு, அரசு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனா். பெற்றோா்களுக்கு அறிவுரை கூறி அனுப்பி வைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.