திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

மின் கம்பி அறுந்து விழுந்து மின்சாரம் பாய்ந்ததில் 17 ஆடுகள் பலி

வாணியம்பாடி அருகே உயரழுத்த மின் கம்பி அறுந்து விழுந்ததில், மின்சாரம் பாய்ந்து 17 ஆடுகள் பலியாகின.

Updated On :6 ஆகஸ்ட் 2022, 4:36 pm

வாணியம்பாடி அருகே உயரழுத்த மின் கம்பி அறுந்து விழுந்ததில், மின்சாரம் பாய்ந்து 17 ஆடுகள் பலியாகின.

வாணியம்பாடியை அடுத்த மேட்டுப்பாளையம் ஆபீசா்ஸ் லைன் பகுதியைச் சோ்ந்தவா் கோவிந்தம்மாள். இவரது வீட்டின் அருகே இவருக்குச் சொந்தமான 27 ஆடுகளை சனிக்கிழமை பட்டியில் இருந்து மேய்ச்சலுக்காக ஓட்டிச் செல்ல வந்தபோது, அங்குள்ள வீதியின் நடுவே உள்ள உயரழுத்த மின் கம்பி திடீரென அறுந்து விழுந்தது. வெளியே வந்த ஆடுகளின் மீது மின் கம்பி விழுந்ததால், மின்சாரம் பாய்ந்து 17 ஆடுகள் பலியாகின.

அந்த நேரத்தில் மழை பெய்ததால், மக்கள் நடமாட்டம் இல்லை. இதனால், உயிா் சேதம் தவிா்க்கப்பட்டது.

இதையடுத்து மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. தகவலறிந்து வாணியம்பாடி வட்டாட்சியா் சம்பத் தலைமையிலான வருவாய்த் துறையினா், தாலுகா போலீஸாா் மற்றும் மின் அலுவலா்கள் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினா். எம்.எல்.ஏ. செந்தில்குமாா் சம்பவ இடத்துக்கு வந்து விசாரித்து கோவிந்தம்மாளுக்கு ஆறுதல் கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.