சிலிண்டர் பிரச்னை தீர்ந்தது! கட்டுப்பாடுகளை நீக்கிய மத்திய அரசு!!ஒன்றிய அரசை இந்திய அரசு என மாற்றிய முதல்வர் விஜய்!எஸ்.பி. வேலுமணிக்கு அதிமுகவில் மீண்டும் பதவி!என்.எல்.சி. பங்குகள் விற்பனை! பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்!திருவள்ளூர் அமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 12 ஆக உயர்வு!டிரில்லியனர் அந்தஸ்தை இழந்தார் எலான் மஸ்க்!ரூ.2.47 லட்சம் கோடி கடன்!! மின்வாரிய வெள்ளை அறிக்கை வெளியானது! தமிழக மின்துறையில் 20,449 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்: அமைச்சர் நிர்மல் குமார்எ.வ. வேலு உள்பட 11 பேர் மீது வழக்கு! தொடரும் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனைசெந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!முதல்வர் விஜய், என் மீது விமர்சனங்கள் வைக்கட்டும்! அதில் என்ன பிரச்னை? மு.க. ஸ்டாலின்பெரம்பூர் செல்லும் அரசுப் பேருந்தில் பயணித்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்!அமோனியா கசிவு: ஆலையில் 13 டன் கடல் உணவுகள் பறிமுதல்!சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூன் 25) சவரனுக்கு ரூ. 1,680 குறைந்துள்ளது!
/

நாளை பக்ரீத் பண்டிகை: வாணியம்பாடியில் களைக்கட்டும் மாட்டுச் சந்தை

நாளை பக்ரீத் பண்டிகை முன்னிட்டு வாணியம்பாடியில் மாட்டுச் சந்தை களைக்கட்டியுள்ளது.

News image
Updated On :9 ஜூலை 2022, 3:44 pm IST

திருப்பத்தூர்: நாளை பக்ரீத் பண்டிகை முன்னிட்டு வாணியம்பாடியில் மாட்டுச் சந்தை களைக்கட்டியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டத்தில் பெரிய மாட்டு சந்தையாக வாணியம்பாடி மாட்டு சந்தை விளங்கி வருகிறது. வாணியம்பாடியில் மாட்டு சந்தையானது வாரந்தோறும் சனிக்கிழமை அன்று கூடுகிறது. ஒவ்வொரு சனிக்கிழமையும் திருப்பத்தூர் மாவட்டதில்  உள்ள சுமார் 200-க்கும் மேற்பட்ட கிராமங்களிலிருந்தும், வேலூர், ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் விவசாயிகள் தங்கள் மாடுகளை கொண்டு வந்து விற்பனை செய்வதும், மாடுகளை வாங்குவதும் வழக்கமாக இருந்து வருகிறது.

Story image

ஒவ்வொரு சனிக்கிழமையும் சுமார் 1000-க்கும் மேற்பட்ட மாடுகள் இந்த வாணியம்பாடி மாட்டு சந்தைக்கு விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது.

வாணியம்பாடியை  பொறுத்தவரை இஸ்லாமியர்கள் அதிகமாக வாழக்கூடிய பகுதி என்பதால் நாளை இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகையான பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதற்காக இஸ்லாமியர்கள் குர்பானி கொடுப்பது வழக்கம். இதனால் இந்த சனிக்கிழமை கூடுதலாகவே சுமார் 5 ஆயிரத்துக்கு மேற்பட்ட மாடுகள் விற்பனைக்காக  கொண்டுவரப்பட்டுள்ளது.

இங்கு விவசாயிகள் மட்டுமின்றி இஸ்லாமியர்களும் குர்பானி கொடுப்பதற்காக  தற்போது மாடுகளை வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர். வழக்கமாக இந்த வாணியம்பாடி மாட்டு சந்தையில் ரூ.60 லட்சத்திற்கு மேல் மாடுகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்த வாரம் சனிக்கிழமை மாடுகள் விற்பனையானது  ரூ. 1 கோடிக்கு மேல் இருக்கும் என்று வியாபாரிகள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.