திருப்பத்தூர்: நாளை பக்ரீத் பண்டிகை முன்னிட்டு வாணியம்பாடியில் மாட்டுச் சந்தை களைக்கட்டியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் பெரிய மாட்டு சந்தையாக வாணியம்பாடி மாட்டு சந்தை விளங்கி வருகிறது. வாணியம்பாடியில் மாட்டு சந்தையானது வாரந்தோறும் சனிக்கிழமை அன்று கூடுகிறது. ஒவ்வொரு சனிக்கிழமையும் திருப்பத்தூர் மாவட்டதில் உள்ள சுமார் 200-க்கும் மேற்பட்ட கிராமங்களிலிருந்தும், வேலூர், ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் விவசாயிகள் தங்கள் மாடுகளை கொண்டு வந்து விற்பனை செய்வதும், மாடுகளை வாங்குவதும் வழக்கமாக இருந்து வருகிறது.

ஒவ்வொரு சனிக்கிழமையும் சுமார் 1000-க்கும் மேற்பட்ட மாடுகள் இந்த வாணியம்பாடி மாட்டு சந்தைக்கு விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது.
வாணியம்பாடியை பொறுத்தவரை இஸ்லாமியர்கள் அதிகமாக வாழக்கூடிய பகுதி என்பதால் நாளை இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகையான பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதற்காக இஸ்லாமியர்கள் குர்பானி கொடுப்பது வழக்கம். இதனால் இந்த சனிக்கிழமை கூடுதலாகவே சுமார் 5 ஆயிரத்துக்கு மேற்பட்ட மாடுகள் விற்பனைக்காக கொண்டுவரப்பட்டுள்ளது.
இங்கு விவசாயிகள் மட்டுமின்றி இஸ்லாமியர்களும் குர்பானி கொடுப்பதற்காக தற்போது மாடுகளை வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர். வழக்கமாக இந்த வாணியம்பாடி மாட்டு சந்தையில் ரூ.60 லட்சத்திற்கு மேல் மாடுகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இந்த வாரம் சனிக்கிழமை மாடுகள் விற்பனையானது ரூ. 1 கோடிக்கு மேல் இருக்கும் என்று வியாபாரிகள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திருமணத்துக்கு முன் குஷ்பு மகள் அவந்திகா பகிர்ந்த படங்கள்!
கணக்கில் வராத ரூ.40 லட்சம் பறிமுதல்! எ.வ. வேலுக்கு தொடர்புடைய 20 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

தலைவர்களை இழிவுபடுத்தும் இடமல்ல சட்டமன்றம்! கனிமொழி எம்.பி | DMK | TVK

வெனிசுவேலா நிலநடுக்கம்! மீட்புப் படைகளை அனுப்பும் அமெரிக்கா!
விடியோக்கள்

மெஸ்ஸியைத் துரத்தும் எம்பாபே! | FIFA | FIFA World Cup | Messi |

பார்வையாளர்களைப் பரிசோதிக்கும் அனந்தன் காடு: திரைவிமர்சனம்

மின் கட்டணம் உயர்வா? வெள்ளை அறிக்கை வெளியிட்டு பேசிய அமைச்சர் நிர்மல் குமார் | Dinamani



