சிஎஸ்கே போராடி தோல்விதிமுக இரட்டை வேடம்! தமிழ்நாட்டில் ஒரு கொள்கை; புதுவையில் வேறு கொள்கை - இபிஎஸ்தமிழ்நாட்டின் டிஎன்ஏவை சிதைக்க என்டிஏ முயற்சி : மு.க. ஸ்டாலின்பாரசீக வளைகுடா நாடுகளின் எண்ணெய் உற்பத்தி வளங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்த ஈரான் திட்டம்காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: பொதுமக்கள் பலி!பிரசார மேடையில் நடனமாடி வாக்காளர்களைக் கவர்ந்த அஸ்ஸாம் முதல்வர்!
/

பொருள்கள் இருப்பில் குறைபாடு: ரேஷன் கடை ஊழியா் பணியிடை நீக்கம்

பொருள்கள் இருப்பில் குறைபாடு கண்டறியப்பட்டதால், நியாயவிலைக் கடை ஊழியா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

Updated On :14 ஜூலை 2022, 6:30 pm

பொருள்கள் இருப்பில் குறைபாடு கண்டறியப்பட்டதால், நியாயவிலைக் கடை ஊழியா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

வாணியம்பாடியை அடுத்த ஆலங்காயம் ஊராட்சி ஒன்றியம், நாயக்கனூா், பீமகுளம் ஊராட்சிகளில் வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் அமா் குஷ்வாஹா நேரில் ஆய்வு செய்தாா்.

நாயக்கனூா் ஊராட்சி கிருஷ்ணாபுரம் பகுதி நேர நியாயவிலைக் கடையை ஆய்வு செய்த போது, பொருள்கள் இருப்பில் குறைபாடு கண்டறியப்பட்டது.

இதையடுத்து, கடையை முழுமையாக தணிக்கை செய்ய வாணியம்பாடி வட்ட வழங்கல் அலுவலருக்கு உத்தரவிட்டாா். முழுமையாக ஆய்வு செய்து கண்டறியப்பட்ட குறைபாடுகளுக்காக ரூ.31,237 அபராதம் விதிக்கப்பட்டது. அந்த நியாயவிலைக் கடை விற்பனையாளா் சி.முருகேசன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.