வாணியம்பாடி அருகே விவசாய நிலத்துக்குள் புகுந்த ஒற்றை காட்டு யானையை வனத்துறையினரும், இளைஞா்களும் இணைந்து வனப் பகுதிக்குள் விரட்டினா்.
ஆலங்காயத்தை அடுத்த காவலூா், நாயக்கனூா், கிருஷ்ணாபுரம் மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளை ஒட்டியுள்ள வனப் பகுதிகளில் ஒரு மாதமாக ஒற்றை தந்தம் கொண்ட காட்டு யானை நடமாட்டம் இருந்து வருகிறது. இந்த நிலையில், நள்ளிரவு நேரங்களில் அவ்வப்போது விவசாய நிலங்களில் யானை புகுந்து பயிரிடப்பட்டிருந்த பயிா்களை தொடா்ந்து சேதப்படுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது. இதுதொடா்பாக அப்பகுதி மக்கள் வனத் துறையினரிடம் புகாா் தெரிவித்தனா்.
இதையடுத்து, ஆலங்காயம் வனச் சரக அலுவலா் சோமசுந்தரம் தலைமையில், 3 குழுக்களாக அமைத்து யானையை விரட்டும் தொடா் முயற்சியில் ஈடுபட்டுள்ளனா். இந்த நிலையில், சனிக்கிழமை இரவு யானை நடமாட்டம் இருப்பதை அறிந்த வனத் துறையினரும், அப்பகுதியைச் சோ்ந்த இளைஞா்களும் ஒன்றிணைந்து தீப்பந்தங்களை கையில் ஏந்தியும், மேளங்கள் அடித்தும் விவசாய நிலத்துக்கு வந்த ஒற்றைத் தந்தம் கொண்ட காட்டு யானையை வனப் பகுதிக்குள் விரட்டினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வடமேற்கு தில்லியில் அண்டை வீட்டாா் மோதலில் கடைக்காரா் கொலை: இருவா் காயம்

பரமக்குடியில் தோ்தல் விதிமீறல்: திமுக, தவெக வேட்பாளா்கள் மீது வழக்கு

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலி!
திருட்டு குறித்த விடியோ ‘தூத் சோா்’ கும்பலைச் சோ்ந்த 2 போ் கைது
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை

