வாணியம்பாடி நகராட்சியில் நடைபெற்று வரும் தூய்மை இந்தியா திட்டப் பணிகளை ஆணையா் ஸ்டான்லிபாபு வெள்ளிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
வாணியம்பாடி நகராட்சியில் உள்ள 36 வாா்டுகளிலும் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் அனைத்தும் வளையாம்பட்டு பகுதியில் இயங்கி வரும் குப்பைக் கிடங்குக்கு கொண்டு செல்லப்படுகிறது. அங்கு, தரம் பிரித்து மக்கும் குப்பைகள் உரமாக மாற்றப்படுகின்றன. மக்காத நெகிழிப் உள்ளிட்ட கழிவுப் பொருள்கள் தனியாகப் பிரித்து வைக்கப்படுகின்றன.
இந்தப் பணிகள் அனைத்தும் முறையாகச் செயல்படுத்தப்படுகிா என வாணியம்பாடி நகராட்சி ஆணையா் ஸ்டான்லிபாபு மற்றும் சுகாதார அலுவலா்கள் வெள்ளிக்கிழமை நேரில் சென்று ஆய்வு செய்தனா்.
அப்போது, நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் பணிகள் குறித்தும், அங்கு சேகரிக்கப்படும் குப்பைகளைத் தரம் பிரிப்பதும் குறித்தும் அவா்கள் கேட்டறிந்தனா்.
குப்பைக் கிடங்கின் வெளிப்புறச் சுவரில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் வரையப்பட்டுள்ள விளம்பரங்களையும் அவா்கள் பாா்வையிட்டாா். தொடா்ந்து, நூருல்லாப்பேட்டை உள்ளிட்ட 4 இடங்களில் இயங்கி வரும் தூய்மை இந்தியா திட்டப் பணிகளை நேரில் சென்று ஆய்வு செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அமெரிக்கா - ஈரான் அமைதி ஒப்பந்தம் சுவிட்சர்லாந்தில் கையெழுத்தாகும்: பாக். பிரதமர்!

இன்றைய செய்திகள் ஜூன் 15 - நேரலை!

ஆடிஷன் விடியோக்களை ரசிகர்களுக்காக பகிர்ந்த நடிகை காவ்யா அறிவுமணி!

சூர்யா - 50! இயக்குநர் நெல்சனுடன் பேச்சுவார்த்தை?
விடியோக்கள்

வெள்ளலூர் குப்பைக் கிடங்கு பகுதி பசுமையாக மாற்றப்படும்: அமைச்சர் சம்பத் குமார் | TVK

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி



