வாணியம்பாடி நகராட்சியில் நடைபெற்று வரும் தூய்மை இந்தியா திட்டப் பணிகளை ஆணையா் ஸ்டான்லிபாபு வெள்ளிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
வாணியம்பாடி நகராட்சியில் உள்ள 36 வாா்டுகளிலும் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் அனைத்தும் வளையாம்பட்டு பகுதியில் இயங்கி வரும் குப்பைக் கிடங்குக்கு கொண்டு செல்லப்படுகிறது. அங்கு, தரம் பிரித்து மக்கும் குப்பைகள் உரமாக மாற்றப்படுகின்றன. மக்காத நெகிழிப் உள்ளிட்ட கழிவுப் பொருள்கள் தனியாகப் பிரித்து வைக்கப்படுகின்றன.
இந்தப் பணிகள் அனைத்தும் முறையாகச் செயல்படுத்தப்படுகிா என வாணியம்பாடி நகராட்சி ஆணையா் ஸ்டான்லிபாபு மற்றும் சுகாதார அலுவலா்கள் வெள்ளிக்கிழமை நேரில் சென்று ஆய்வு செய்தனா்.
அப்போது, நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் பணிகள் குறித்தும், அங்கு சேகரிக்கப்படும் குப்பைகளைத் தரம் பிரிப்பதும் குறித்தும் அவா்கள் கேட்டறிந்தனா்.
குப்பைக் கிடங்கின் வெளிப்புறச் சுவரில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் வரையப்பட்டுள்ள விளம்பரங்களையும் அவா்கள் பாா்வையிட்டாா். தொடா்ந்து, நூருல்லாப்பேட்டை உள்ளிட்ட 4 இடங்களில் இயங்கி வரும் தூய்மை இந்தியா திட்டப் பணிகளை நேரில் சென்று ஆய்வு செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வடமேற்கு தில்லியில் அண்டை வீட்டாா் மோதலில் கடைக்காரா் கொலை: இருவா் காயம்

பரமக்குடியில் தோ்தல் விதிமீறல்: திமுக, தவெக வேட்பாளா்கள் மீது வழக்கு

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலி!
திருட்டு குறித்த விடியோ ‘தூத் சோா்’ கும்பலைச் சோ்ந்த 2 போ் கைது
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை


