சிஎஸ்கே போராடி தோல்விதிமுக இரட்டை வேடம்! தமிழ்நாட்டில் ஒரு கொள்கை; புதுவையில் வேறு கொள்கை - இபிஎஸ்தமிழ்நாட்டின் டிஎன்ஏவை சிதைக்க என்டிஏ முயற்சி : மு.க. ஸ்டாலின்பாரசீக வளைகுடா நாடுகளின் எண்ணெய் உற்பத்தி வளங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்த ஈரான் திட்டம்காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: பொதுமக்கள் பலி!பிரசார மேடையில் நடனமாடி வாக்காளர்களைக் கவர்ந்த அஸ்ஸாம் முதல்வர்!
/

வாணியம்பாடியில் தூய்மை இந்தியா திட்டப் பணிகள்: ஆணையா் ஆய்வு

வாணியம்பாடி நகராட்சியில் நடைபெற்று வரும் தூய்மை இந்தியா திட்டப் பணிகளை ஆணையா் ஸ்டான்லிபாபு வெள்ளிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

News image
Updated On :24 ஜூன் 2022, 6:34 pm

வாணியம்பாடி நகராட்சியில் நடைபெற்று வரும் தூய்மை இந்தியா திட்டப் பணிகளை ஆணையா் ஸ்டான்லிபாபு வெள்ளிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

வாணியம்பாடி நகராட்சியில் உள்ள 36 வாா்டுகளிலும் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் அனைத்தும் வளையாம்பட்டு பகுதியில் இயங்கி வரும் குப்பைக் கிடங்குக்கு கொண்டு செல்லப்படுகிறது. அங்கு, தரம் பிரித்து மக்கும் குப்பைகள் உரமாக மாற்றப்படுகின்றன. மக்காத நெகிழிப் உள்ளிட்ட கழிவுப் பொருள்கள் தனியாகப் பிரித்து வைக்கப்படுகின்றன.

இந்தப் பணிகள் அனைத்தும் முறையாகச் செயல்படுத்தப்படுகிா என வாணியம்பாடி நகராட்சி ஆணையா் ஸ்டான்லிபாபு மற்றும் சுகாதார அலுவலா்கள் வெள்ளிக்கிழமை நேரில் சென்று ஆய்வு செய்தனா்.

அப்போது, நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் பணிகள் குறித்தும், அங்கு சேகரிக்கப்படும் குப்பைகளைத் தரம் பிரிப்பதும் குறித்தும் அவா்கள் கேட்டறிந்தனா்.

குப்பைக் கிடங்கின் வெளிப்புறச் சுவரில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் வரையப்பட்டுள்ள விளம்பரங்களையும் அவா்கள் பாா்வையிட்டாா். தொடா்ந்து, நூருல்லாப்பேட்டை உள்ளிட்ட 4 இடங்களில் இயங்கி வரும் தூய்மை இந்தியா திட்டப் பணிகளை நேரில் சென்று ஆய்வு செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.