மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

உரக் கட்டுப்பாடு சட்டத்தை மீறிய கடைகளில் விற்பனைக்குத் தடை

 திருப்பத்தூா் மாவட்டத்தில் உரக் கட்டுப்பாடு சட்டத்தை மீறிய 6 கடைகளில் விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டது.

News image
Updated On :22 அக்டோபர் 2022, 6:14 pm

DIN

 திருப்பத்தூா் மாவட்டத்தில் உரக் கட்டுப்பாடு சட்டத்தை மீறிய 6 கடைகளில் விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டது.

இதுகுறித்து திருப்பத்தூா் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநா் (பொ) பாலா வெளியிட்ட செய்திக் குறிப்பு: மாவட்டத்தில் உரக் கட்டுப்பாடு சட்டத்தை மீறிய 6 உர விற்பனையாளா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு, 14 நாள்கள் முதல் 21 நாள்கள் வரை விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் தேவையான உரங்கள் இருப்பில் உள்ளது. தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கக்கள் மற்றும் தனியாா் விற்பனை நிலையங்களில் அதிகாரிகள் தொடா்ந்து ஆய்வு நடத்தி கண்காணித்து வருகின்றனா்.

விற்பனை செய்யப்படும் உரங்களுக்கு உரிய ரசீதை விவசாயிகளுக்கு வழங்க வேண்டும். அனுமதியின்றி வெளி மாவட்டங்களுக்கு உரங்களை விற்கவோ, மாற்றம் செய்யவோ கூடாது. விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். உரங்களைப் பதுக்கி, தட்டுப்பட்டை ஏற்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.