அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!நாங்குநேரி அருகே பொது இடத்தில் நால்வருக்கு அரிவாள் வெட்டு - எஸ்.பி, டி.ஐ.ஜி விசாரணை!கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

பாலாற்றில் தோல் தொழிற்சாலை கழிவுகளை கலப்பதாக புகார்

வாணியம்பாடி அருகே பாலாற்றில் தோல் கழிவுகளை தொழிற்சாலை நிர்வாகத்தினர் கலப்பதாக விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

News image
Updated On :20 ஜூலை 2022, 5:21 am

DIN

திருப்பத்தூர்: வாணியம்பாடி அருகே பாலாற்றில் தோல் கழிவுகளை தொழிற்சாலை நிர்வாகத்தினர் கலப்பதாக விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி மற்றும் ஆம்பூர் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு முதல் அதிகாலை வரை கனமழை பெய்தது.

மேலும், பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு 22 தடுப்பணைகளை கட்டியுள்ள நிலையில், அனைத்தையும் தாண்டி பாலாற்றில் தற்போது நீர்வரத்து அதிகரித்துள்ளது.

இந்த சூழலை பயன்படுத்தி, வாணியம்பாடியில் உள்ள தோல் தொழிற்சாலை நிர்வாகம் கழிவுகளை பாலாற்றில் திறந்துவிட்டுள்ளனர். இதனால் மாராப்பட்டு பகுதியில் உள்ள பாலாறு தரைப்பாலத்தின் கீழ், தண்ணீரில் அதிகளவில் நுரை பொங்கியிருப்பதால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.

இதுகுறித்து பாலாற்று படுகை விவசாயிகள், வாணியம்பாடி மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில் புகார் அளித்த நிலையில், இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

மேலும், நுரை பொங்குவதை தடுக்க தோல் தொழிற்சாலை நிர்வாகத்தினர், சில மருந்துகளை பாலாற்று பாலத்தின் ஓரம் தெளித்திருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுப்பியுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.