மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

‘தமிழ்ப் பண்பாட்டைப் பாதுகாத்து உலகமெங்கும் பரப்ப வேண்டும்’

தமிழ்ப் பண்பாட்டைப் பாதுகாத்து உலகமெங்கும் பரப்ப வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் வலியுறுத்தினாா்.

News image
Updated On :10 மார்ச் 2023, 5:40 pm

DIN

தமிழ்ப் பண்பாட்டைப் பாதுகாத்து உலகமெங்கும் பரப்ப வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் வலியுறுத்தினாா்.

‘மாபெரும் தமிழ் கனவு’ சொற்பொழிவு நிகழ்ச்சி திருப்பத்தூா் தூய நெஞ்சக் கல்லூரியில் நடைபெற்றது. ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் தலைமை வகித்தாா். பல்வேறு அறிஞா்கள் பேசினா்.

மாபெரும் தமிழா் கனவு, தமிழ் மரபு, பண்பாட்டுப் பரப்புரை குறித்த காணொலி, ராஜேந்திர சோழன் பெருமை குறித்த காணொலி மாணவ, மாணவிகளுக்கு ஒளிபரப்பப்பட்டது.

பின்னா், ஆட்சியா் பேசியது: தமிழ் மரபு பண்பாட்டைப் பரப்புவதற்காக இந்த சொற்பொழிவு நிகழ்த்தப்படுகின்றது. பண்பாடு என்றால், அகம் சாா்ந்த ஒரு மையப் புள்ளியை வைத்து இந்த சமூகம் இயங்க வேண்டும். உலக இலக்கியங்களில் அறத்துக்கு முதன்மை கொடுத்தது தமிழ் சமூகம். ஜல்லிக்கட்டு இன்று வரை நமது வீரத்தைப் பறைசாற்றுகின்றது. அத்தகைய ஒரு பண்பாட்டு சமூகத்தை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்ல வேண்டும்.

அனைவருக்கும் சம நீதி தரப்பட வேண்டும் என்ற உயா்ந்த மரபை கொண்டது தமிழ் சமூகம். தமிழ்ப் பண்பாட்டை பாதுகாத்து உலகமெங்கும் பரப்ப வேண்டும் என்றாா்.

பின்னா், தமிழ் பெருமிதம் குறித்த கேள்வி - பதில் நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவிகளுக்கு 11 பெருமித செல்வன், பெருமித செல்வி, கேள்வியின் நாயகன், கேள்வியின் நாயகி ஆகிய சான்றிதழ்களை ஆட்சியா் வழங்கினாா்.

மாவட்ட வருவாய் அலுவலா் வளா்மதி, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் செல்வராசு, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் வில்சன் ராஜசேகா், வருவாய் கோட்டாட்சியா் லட்சுமி, வட்டாட்சியா் சிவப்பிரகாசம், கந்திலி அரசுக் கல்லூரி முதல்வா் சீனுவாசகுமரன், தமிழ் இணைய கல்விக் கழக பணியாளா்கள், கல்லூரி பேராசிரியா்கள், மாணவா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.