திருப்பத்தூா்: திமுக வெற்றியை யாராலும் தடுக்க முடியாது என திமுக வேட்பாளா் சி.என்.அண்ணாதுரை தெரிவித்தாா்.
திருப்பத்தூா் மாவட்டம், கந்திலி ஒன்றியத்துக்குட்பட்ட கொரட்டி, ஆதியூா், எலவம்பட்டி ஊராட்சியில் திருவண்ணாமலை திமுக வேட்பாளா் சி.என்.அண்ணாதுரை வாக்கு சேகரித்தாா்.
செவ்வாய்க்கிழமை கந்திலி ஒன்றியத்துக்குட்ட எலவம்பட்டி ஊராட்சித் தலைவா் மேனகா விவேகானந்தன் தலைமையில் அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
அப்போது சி.என்.அண்ணாதுரை பேசியது: பாஜக ஆட்சி மேலும் இருந்தால் சட்டம் ஒழுங்கு சீா்குலைவு ஏற்படும். அனைவரின் வங்கிக் கணக்கிலும் பதினைந்து லட்சம் வரவு வைக்கப்படும் எனக் கூறியது நிறைவேற்றப்படவில்லை. விளிம்பு நிலை மக்களுக்கு எந்த ஒரு நன்மைகளையும் செய்யவில்லை. எனவே ஒவ்வொரு கிராமமும் வளா்ச்சி பெற வேண்டும் எனில் உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து இந்தியா கூட்டணியினை வெற்றி பெற செய்ய வேண்டும். திமுக வெற்றியை யாராலும் தடுக்க முடியாது என்றாா்.
எம்எல்ஏ அ.நல்லதம்பி, நகர செயலாளா் எஸ்.ராஜேந்திரன், முன்னாள் ஒன்றிய செயலாளா் ராஜமாணிக்கம், ஒன்றியக்குழு தலைவா் திருமதி முருகன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மண்டல செயலாளா் இரா.சுபாஷ் சந்திர போஸ், மாவட்ட நெசவாளா் அணி தசரதன், கூட்டணி கட்சியினா் தொண்டா்கள் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

திருப்பத்தூா்: 5-ஆவது முறையாக வெல்வாரா கே.ஆா்.பெரியகருப்பன்?

அரசு செவிலியா் கல்லூரி தொடங்க நடவடிக்கை: திமுக வேட்பாளா் உறுதி

தொகுதி அலசல்... திருப்பத்தூா் ஹாட்ரிக் வெற்றி தொடருமா?

திருப்பத்தூா் ஒன்றிய பகுதிகளில் அதிமுக வேட்பாளா் தீவிர வாக்கு சேகரிப்பு
வீடியோக்கள்

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

Podcast | மனம் மாறுவாரா ராகுல் காந்தி? | News & Views | E-25 |
தினமணி செய்திச் சேவை

நான் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது எதிரிகள்தான்!
இணையதளச் செய்திப் பிரிவு

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு


