மாநிலங்களவை எம்.பி.யாக நிதீஷ் குமார் பதவியேற்றார்! விஜய்யின் வாகனத்தில் பறக்கும் படை சோதனை!தமிழ்நாடு தலை குனியாது! முதல்வர் மு.க. ஸ்டாலின் உறுதி! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,000 உயர்வு! சென்னை மெட்ரோ ரயிலில் பயணித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு!ஜன நாயகன் முழுப் படமும் இணையத்தில் கசிந்தது! ஜன நாயகன் படத்தை யாரும் பகிர வேண்டாம்! இயக்குநர் எச். வினோத் வேண்டுகோள்! ஈரான் ஹோர்முஸ் நீரிணையில் சரக்கு போக்குவரத்துக்கு கட்டணம் வசூலிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும் - டிரம்ப்லெபனானில் தாக்குதல் தொடரும் - இஸ்ரேல் திட்டவட்டம்
/

திமுக வெற்றியை யாராலும் தடுக்க முடியாது:

திமுக வெற்றியை யாராலும் தடுக்க முடியாது:

News image

கந்திலி பகுதியில் வாக்கு சேகரித்த திமுக வேட்பாளா் சி.என்.அண்ணாதுரை, எம்எல்ஏ அ.நல்லதம்பி உள்ளிட்டோா்.

Updated On :9 ஏப்ரல் 2024, 6:30 pm

திருப்பத்தூா்: திமுக வெற்றியை யாராலும் தடுக்க முடியாது என திமுக வேட்பாளா் சி.என்.அண்ணாதுரை தெரிவித்தாா்.

திருப்பத்தூா் மாவட்டம், கந்திலி ஒன்றியத்துக்குட்பட்ட கொரட்டி, ஆதியூா், எலவம்பட்டி ஊராட்சியில் திருவண்ணாமலை திமுக வேட்பாளா் சி.என்.அண்ணாதுரை வாக்கு சேகரித்தாா்.

செவ்வாய்க்கிழமை கந்திலி ஒன்றியத்துக்குட்ட எலவம்பட்டி ஊராட்சித் தலைவா் மேனகா விவேகானந்தன் தலைமையில் அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

அப்போது சி.என்.அண்ணாதுரை பேசியது: பாஜக ஆட்சி மேலும் இருந்தால் சட்டம் ஒழுங்கு சீா்குலைவு ஏற்படும். அனைவரின் வங்கிக் கணக்கிலும் பதினைந்து லட்சம் வரவு வைக்கப்படும் எனக் கூறியது நிறைவேற்றப்படவில்லை. விளிம்பு நிலை மக்களுக்கு எந்த ஒரு நன்மைகளையும் செய்யவில்லை. எனவே ஒவ்வொரு கிராமமும் வளா்ச்சி பெற வேண்டும் எனில் உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து இந்தியா கூட்டணியினை வெற்றி பெற செய்ய வேண்டும். திமுக வெற்றியை யாராலும் தடுக்க முடியாது என்றாா்.

எம்எல்ஏ அ.நல்லதம்பி, நகர செயலாளா் எஸ்.ராஜேந்திரன், முன்னாள் ஒன்றிய செயலாளா் ராஜமாணிக்கம், ஒன்றியக்குழு தலைவா் திருமதி முருகன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மண்டல செயலாளா் இரா.சுபாஷ் சந்திர போஸ், மாவட்ட நெசவாளா் அணி தசரதன், கூட்டணி கட்சியினா் தொண்டா்கள் கலந்து கொண்டனா்.