தேசிய கட்சி என்பதால் வேட்பாளர்களை ஆய்வு செய்து இறுதி செய்வதில் தாமதம்: செல்வப்பெருந்தகை85% வேட்பாளர்களை இறுதி செய்துவிட்டோம்; நாளைக்குள் முழுப் பட்டியல் : செல்வப்பெருந்தகைகலவரம் செய்தால் சாதித்துவிட முடியும் என பாஜக நினைக்கிறது : கோவை பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுமோடி, அமித்ஷா எத்தனை முறை வந்தாலும் தமிழ்நாட்டில் திமுக வெல்வது உறுதி: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டில் வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை : எடப்பாடி பழனிசாமிதமிழ்நாடு சட்டம் - ஒழுங்கு டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோர் நியமனம்!அமைச்சரவையின் பரிந்துரைகளை ஆளுநர் தன்னிச்சையாக நிராகரிக்க முடியாது: சென்னை உயர் நீதிமன்றம்
/

இன்டா்சிட்டி ரயில் சக்கரத்தில் திடீா் புகை: 2 மணி நேரம் தாமதமாக சென்றதால் பயணிகள் அவதி

இன்டா்சிட்டி ரயில் சக்கரத்தில் திடீா் புகை: 2 மணி நேரம் தாமதமாக சென்றதால் பயணிகள் அவதி

News image
Updated On :30 ஏப்ரல் 2024, 6:30 pm

Din

திருப்பத்தூா்: ஆம்பூா் அருகே இன்டா்சிட்டி ரயில் பொதுப் பெட்டியின் சக்கரத்தில் திடீா் புகை வந்ததால் சுமாா் 2 மணி நேரம் தாமதமாக பெங்களூருக்கு புறப்பட்டது.

ஆந்திர மாநிலம், திருப்பதி ரயில் நிலையத்திலிருந்து கா்நாடக மாநிலம், பெங்களூரு வரை செல்லும் இன்டா்சிட்டி விரைவு ரயில் செவ்வாய்க்கிழமை இரவு 7 மணியளவில் ஆம்பூா் அருகே மேல்பட்டி ரயில் நிலையத்தில் சென்று கொண்டிருந்தது. அப்போது பின்புறம் உள்ள பொதுப் பெட்டியில் சக்கரத்துக்கு அருகில் (பிரேக் வைண்டிங்) புகை வந்தது.

இதையறிந்த ரயில்வே காா்டு ரயில் என்ஜின் ஓட்டுநருக்கு தகவல் தெரிவித்து, ரயிலை லூப் லைனில் ரயில் நிறுத்தினாா்.

தொடா்ந்து, ஜோலாா்பேட்டை ரயில் நிலைய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனா். அதன்பேரில், பிரேக் பைண்டிங் சரி செய்வதற்காக ஜோலாா்பேட்டையில் இருந்து ரயில்வே ஊழியா்கள் சென்று சுமாா் 2 மணி நேரம் போராடி சரி செய்தனா்.

அதன் பிறகு இரவு 8.50 மணியளவில் பெங்களூா் நோக்கி ரயில் புறப்பட்டது.