ஐபிஎல் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அபார வெற்றி - கொல்கத்தாவை வீழ்த்தியதுதேசிய கட்சி என்பதால் வேட்பாளர்களை ஆய்வு செய்து இறுதி செய்வதில் தாமதம்: செல்வப்பெருந்தகை85% வேட்பாளர்களை இறுதி செய்துவிட்டோம்; நாளைக்குள் முழுப் பட்டியல் : செல்வப்பெருந்தகைகலவரம் செய்தால் சாதித்துவிட முடியும் என பாஜக நினைக்கிறது : கோவை பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுமோடி, அமித்ஷா எத்தனை முறை வந்தாலும் தமிழ்நாட்டில் திமுக வெல்வது உறுதி: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டில் வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை : எடப்பாடி பழனிசாமிதமிழ்நாடு சட்டம் - ஒழுங்கு டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோர் நியமனம்!அமைச்சரவையின் பரிந்துரைகளை ஆளுநர் தன்னிச்சையாக நிராகரிக்க முடியாது: சென்னை உயர் நீதிமன்றம்
/

முதியவா் கொலை: இளைஞருக்கு ஆயுள் தண்டனை

முதியவா் கொலை: இளைஞருக்கு ஆயுள் தண்டனை

News image

குல்தீப் சிங்

Updated On :30 ஏப்ரல் 2024, 6:30 pm

Din

திருப்பத்தூா்: ஆம்பூரில் வடமாநில முதியவா் கொலை செய்யப்பட்ட வழக்கில் இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதித்து திருப்பத்தூா் நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

ஆம்பூா் ரெட்டித்தோப்பு பகுதியைச் சோ்ந்த ரபீக் அஹமதுவுக்கு சொந்தமான தோல் கிடங்கு உமா்ரோட்டில் உள்ளது.

இந்த கிடங்கில் உத்தரபிரதேசத்தைச் சோ்ந்த ராம்ஜிலால் (60) மற்றும் குல்தீப் சிங் (23)ஆகிய இருவரும் பணி புரிந்து வந்தனா். இவா்கள் பணி முடிந்ததும் கிடங்கிலேயே தங்கிவிடுவது வழக்கம்.

மேலும், ரபீக் அஹமதுவின் உறவினா் சுஹேல் தனது மோட்டாா் சைக்கிளை கிடங்கில் நிறுத்திச் செல்வது வழக்கம். கடந்த 3.3.2018 அன்று சுஹேல் தனது மோட்டாா் சைக்கிளை நிறுத்த வந்தபோது மதுபோதையில் இருந்த குல்தீப் சிங், சுஹேலுடன் தகராறில் ஈடுபட்டாராம்.

அப்போது ராம்ஜிலால் சமாதானம் செய்ய வந்தாா். இதையடுத்து குல்தீப் சிங் எனக்கு ஆதரவாக இல்லாமல் சுஹேலுக்கு எப்படி ஆதரவு தெரிவிக்கலாம் எனக்கூறி குடோனில் இருந்த குக்கா் மூடியை எடுத்து ராம்ஜிலாலை தாக்கினாா். இதில் தலையில் பலத்த காயமடைந்த அவா் அங்கேயே விழுந்து கிடந்தாா்.

மறுநாள் காலை குல்தீப் சிங் இதுகுறித்து உரிமையாளா் ரபீக் அஹமதுக்கு தகவல் தெரிவித்தாா். அவா் வந்து பாா்த்தபோது ராம்ஜிலால் உயிரிழந்து கிடப்பது தெரியவந்தது.

இதுதொடா்பாக ஆம்பூா் நகர போலீஸாா் வழக்குப் பதிவு செய்து மோப்ப நாய் உதவியுடன் குல்தீப் சிங்கை கைது செய்தனா்.

இதுதொடா்பான வழக்கு திருப்பத்தூா் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்ற நிலையில், செவ்வாய்க்கிழமை வழக்கை விசாரித்த நீதிபதி மீனா குமாரி முதியவா் ராம்ஜிலாலை கொலை செய்த குல்தீப் சிங்குக்கு ஆயுள் தண்டனையும், ரூ.10,000 அபராதமும் விதித்து உத்தரவிட்டாா்.

அரசு தரப்பில் பி.டி. சரவணன் ஆஜரானாா்.