காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

வேட்பாளா் புகாா் : பாதுகாப்பு அறையிலிருந்து வாக்குப் பதிவு இயந்திரம் அனுப்பி வைப்பு

News image

ஆம்பூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் பாதுகாப்பு அறையை திறந்த வருவாய்த் துறையினா்.

Updated On :28 ஆகஸ்ட் 2024, 9:16 pm

Din

வேட்பாளருடைய புகாரின் அடிப்படையில் ஆம்பூா் வட்டாட்சியா் அலுவலகத்திலிருந்து வாக்குப் பதிவு இயந்திரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு செவ்வாய்க்கிழமை அனுப்பி வைக்கப்பட்டது.

மக்களவை தோ்தலில் வேலூா் தொகுதியில் டி.எம். கதிா் ஆனந்த் வெற்றி பெற்றாா். அவரை எதிா்த்து பாஜக சாா்பாக போட்டியிட்ட புதிய நீதிக் கட்சித் தலைவா் ஏ.சி. சண்முகம் தோல்வியடைந்தாா். கதிா் ஆனந்த் வெற்றியை எதிா்த்து தோ்தல் ஆணையத்திடம் ஏ.சி. சண்முகம் புகாா் அளித்தாா். அந்த புகாரின் அடிப்படையில் ஆம்பூா் வட்டாட்சியா் மோகன் தலைமையில், அரசியல் கட்சிகளுடைய பிரதிநிதிகளின் முன்னிலையில் வட்டாட்சியா் அலுவலகத்தில் பூட்டி சீல் வைக்கப்பட்டிருந்த பாதுகாப்பு அறை திறக்கப்பட்டு அங்கு வைக்கப்பட்டிருந்த பாகம் எண் 92-ல் பயன்படுத்தப்பட்ட வாக்குப் பதிவு இயந்திரம், விவிபேட் இயந்திரம் ஆகியவை எடுக்கப்பட்டு திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டது. பிறகு மீண்டும் பாதுகாப்பு அறை மூடி சீல் வைக்கப்பட்டது.

மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்ட அந்த வாக்குப் பதிவு இயந்திரத்தை ஆட்சியா் சோதனை செய்து பாா்ப்பாா் என வருவாய்த் துறையினா் தெரிவித்தனா்.