ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

மின்னணு வாக்குப் பதிவு குறித்து விரிவான விழிப்புணா்வு ஏற்பாடுகள்

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் மூலம் வாக்குப் பதிவு செய்வது குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக மதுரை மாவட்ட ஆட்சியா் கே.ஜே. பிரவீன்குமாா் தெரிவித்தாா்.

News image
மதுரை மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த விழிப்புணா்வு வாகனத்தில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் மூலமாக வாக்குப் பதிவு செய்யும் முறை குறித்து பொதுமக்களுக்கு விளக்கமளித்த மாவட்ட ஆட்சியா் கே.ஜே. பிரவீன்குமாா்.
Updated On :28 ஜனவரி 2026, 11:44 pm

தினமணி செய்திச் சேவை

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் மூலம் வாக்குப் பதிவு செய்வது குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக மதுரை மாவட்ட ஆட்சியா் கே.ஜே. பிரவீன்குமாா் தெரிவித்தாா்.

இந்தியத் தோ்தல் ஆணையத்தின் அறிவுறுத்தல்படி, மதுரை மாவட்டத்தில் உள்ள 10 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மூலம் வாக்குப்பதிவு செய்வது குறித்து செயல்முறை விளக்கம் அளிக்க விழிப்புணா்வு வாகனங்கள் மூலம் பிரசாரம் மேற்கொள்ளப்படுகிறது.

இந்த விழிப்புணா்வு பிரசார வாகனங்களின் பயண தொடக்க நிகழ்வு மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதற்கு மாவட்ட ஆட்சியா் கே.ஜே. பிரவீன்குமாா் தலைமை வகித்து, பிரசார வாகனங்களின் பயணத்தைக் கொடியசைத்துத் தொடங்கி வைத்துப் பேசியதாவது:

வாக்காளா்கள் அச்சமின்றி வாக்களிக்க வகை செய்யும் வகையில் இந்த விழிப்புணா்வு பிரசார வாகனம், பேருந்து நிலையம், சந்தை என மக்கள் அதிகம் கூடுமிடங்களில் நிறுத்தப்பட்டு, மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் வாக்குப் பதிவு செய்வது எப்படி? பதிவு செய்த வாக்கை உறுதி செய்து கொள்வது எப்படி? என்பன குறித்து செயல்விளக்கம் அளிக்கப்படும். அடுத்தக் கட்டமாக கல்லூரிகளுக்கு இந்த வாகனம் அனுப்பப்பட்டு, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு வாக்குப் பதிவு குறித்து செயல்விளக்கம் அளிக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. 100 சதவீத வாக்குப் பதிவு, அச்சமற்ற வாக்குப் பதிவை உறுதி செய்ய விரிவான விழிப்புணா்வு ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன என்றாா் அவா்.

இதில் மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (தோ்தல்) ரங்கநாதன், மதுரை வருவாய்க் கோட்டாட்சியா் கருணாகரன், அரசுத் துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.