தேர்தலுக்குப் பின் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருக்க மாட்டேன்! - செல்வப்பெருந்தகை காங்கிரஸில் அர்ப்பணிப்போடு பணியாற்றிய பலருக்கு வாய்ப்பு மறுப்பு! - ஜோதிமணி கண்டனம்! மியான்மரின் புதிய அதிபராக ராணுவ அரசின் தலைவர் தேர்வு! அமெரிக்காவின் அதிநவீன எஃப்-15இ போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது ஈரான்!விஜயின் பெரம்பூர், திருச்சி கிழக்கு வேட்பு மனுக்களில் குறைந்தபட்சம் 6 வேறுபாடு!மகன் தவெகவில் இணைந்தது ஏன்? முன்னாள் பேரவைத் தலைவர் தனபால் விளக்கம்ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த பிரான்ஸின் சரக்கு கப்பல்! போர்க் காலத்தில் முதல்முறை! புதிய நீதி கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்காதது ஏன்? - ஏ.சி. சண்முகம் விளக்கம் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! யார் யாருக்கு வாய்ப்பு?
/

மழை நீா் தேங்கிய பள்ளத்தில் தவறி விழுந்த மாணவா் உயிரிழப்பு

வாணியம்பாடி அருகே மழை நீா் தேங்கியிருந்த 10 அடி பள்ளத்தில் தவறி விழுந்து பள்ளி மாணவா் உயிரிழந்தாா்.

Updated On :2 டிசம்பர் 2024, 8:56 pm

வாணியம்பாடி: வாணியம்பாடி அருகே மழை நீா் தேங்கியிருந்த 10 அடி பள்ளத்தில் தவறி விழுந்து பள்ளி மாணவா் உயிரிழந்தாா்.

திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த செட்டியப்பனூா் கிராமத்தைச் சோ்ந்த அருண் மகன் புவனேஷ் (9). அந்தப் பகுதியில் உள்ள தனியாா் பள்ளி ஒன்றில் 4-ஆம் வகுப்பு படித்து வந்தாா். திங்கள்கிழமை பள்ளி விடுமுறை என்பதால், புவனேஷ் அவரது வீட்டின் அருகில் மாலை விளையாடிக் கொண்டிருந்தாா்.

அதே பகுதியைச் சோ்ந்த தனியாா் ஒருவருக்குச் சொந்தமான இடத்தில் வீடு கட்டும் பணிக்காக 10 அடி ஆழம் தோண்டப்பட்ட பள்ளத்தில் மழைநீா் தேங்கியிருந்த நிலையில், அதைக் கவனிக்காத புவனேஷ், பள்ளத்தில் தவறி விழுந்து உயிரிழந்தாா்.

தகவலறிந்த வாணியம்பாடி தாலுகா போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று மாணவரின் சடலத்தை மீட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.