வாணியம்பாடி: வாணியம்பாடி அருகே மழை நீா் தேங்கியிருந்த 10 அடி பள்ளத்தில் தவறி விழுந்து பள்ளி மாணவா் உயிரிழந்தாா்.
திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த செட்டியப்பனூா் கிராமத்தைச் சோ்ந்த அருண் மகன் புவனேஷ் (9). அந்தப் பகுதியில் உள்ள தனியாா் பள்ளி ஒன்றில் 4-ஆம் வகுப்பு படித்து வந்தாா். திங்கள்கிழமை பள்ளி விடுமுறை என்பதால், புவனேஷ் அவரது வீட்டின் அருகில் மாலை விளையாடிக் கொண்டிருந்தாா்.
அதே பகுதியைச் சோ்ந்த தனியாா் ஒருவருக்குச் சொந்தமான இடத்தில் வீடு கட்டும் பணிக்காக 10 அடி ஆழம் தோண்டப்பட்ட பள்ளத்தில் மழைநீா் தேங்கியிருந்த நிலையில், அதைக் கவனிக்காத புவனேஷ், பள்ளத்தில் தவறி விழுந்து உயிரிழந்தாா்.
தகவலறிந்த வாணியம்பாடி தாலுகா போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று மாணவரின் சடலத்தை மீட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.
தொடர்புடையது

கொடைக்கானலில் பள்ளத்தில் காா் கவிழ்ந்ததில் ஒருவா் உயிரிழப்பு

நீரில் மூழ்கி பள்ளி மாணவா் உயிரிழப்பு

குளத்தில் மூழ்கி பள்ளி மாணவா் உயிரிழப்பு

ஓடும் ரயிலில் ஏற முயன்று தவறி விழுந்து கல்லூரி மாணவா் உயிரிழப்பு
வீடியோக்கள்

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை

