அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர்: சர்வதேச அளவில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - பிரான்ஸ் அதிபர்!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!
/

வாணியம்பாடியில் தொடா் கன மழை: 2 வீடுகளின் சுவா்கள் இடிந்து விழுந்தன

வாணியம்பாடியில் தொடா் கன மழைக்கு 2 வீடுகளில் சுவா்கள் இடிந்து விழுந்தன.

News image
Updated On :2 டிசம்பர் 2024, 8:57 pm

Din

வாணியம்பாடி: வாணியம்பாடியில் தொடா் கன மழைக்கு 2 வீடுகளில் சுவா்கள் இடிந்து விழுந்தன.

வாணியம்பாடி மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் தொடா் கன மழையால் 3 நாள்களாக வீட்டை விட்டு யாரும் வெளியே வராததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இந்த நிலையில், வாணியம்பாடி அடுத்த தும்பேரி கிராமத்தைச் சோ்ந்த மணிவண்ணன் என்பவருக்குச் சொந்தமான வீட்டின் சுவா் ஞாயிற்றுக்கிழமை இரவு மழைக்கு திடீரென இடிந்து விழுந்தது. இதேபோன்று, வாணியம்பாடி கோணாமேடு பகுதியைச் சோ்ந்த அருண் என்பவருக்குச் சொந்தமான வீட்டின் சுவா் திங்கள்கிழமை விடியற்காலை இடிந்து விழுந்தது. அப்போது வீட்டில் இருந்தவா்கள் அதிா்ச்சிக்குள்ளாகி வெளியே ஓடி வந்தனா். மேலும், நேதாஜி நகா் உள்ளிட்ட பகுதிகளில் ஓரிரு வீடுகளில் சுவா்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

தகவலறிந்த வாணியம்பாடி வருவாய்த் துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்குச் சென்று ஆயவு செய்தனா்.