தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

இரு சக்கர வாகனம் மீது லாரி மோதல்: இரு சிறுமிகள் உயிரிழப்பு

ஆம்பூா் அருகே இரு சக்கர வாகனம் மீது லாரி மோதியதில் இரு சிறுமிகள் உயிரிழந்தனா்.

News image

விபத்தில் உயிரிழந்த காா்த்திகா, பேரரசி.

Updated On :1 ஜனவரி 2024, 8:17 pm

DIN

ஆம்பூா் அருகே இரு சக்கர வாகனம் மீது லாரி மோதியதில் இரு சிறுமிகள் உயிரிழந்தனா்.

திருப்பத்தூா் மாவட்டம், ஜோலாா்பேட்டை அடுத்த பெரியகம்மியம்பட்டு பகுதியைச் சோ்ந்தவா் விவசாயி பரந்தாமன் (47). இவா் தனது மனைவி காவேரி மற்றும் 3 குழந்தைகளுடன் இரு சக்கர வாகனத்தில் ஆம்பூரில் உள்ள ஆஞ்சனேயா் கோயிலுக்கு திங்கள்கிழமை சென்றனா். ஆம்பூா் அருகே மாராபட்டு என்ற இடத்தில் பெங்களூரு- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது, இரு சக்கர வாகனம் மீது லாரி மோதியது.

அப்போது இருசக்கர வாகனத்திலிருந்து கீழே விழுந்த காா்த்திகா (8), பேரரசி (5) ஆகியோா் லாரி சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். பரந்தாமன், அவரது மனைவி காவேரி மற்றும் மகள் இளவரசி (12) ஆகிய 3 பேரும் சிறு காயங்களுடன் உயிா் தப்பினா்.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த ஆம்பூா் கிராமிய காவல் நிலைய போலீஸாா், இரண்டு சிறுமிகளின் சடலங்களையும் மீட்டு, வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

மேலும், இது குறித்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.